Total Views: 51806
பொன்சோலை ஊருக்கு அருகே அழகான பொய்கை , அதன் அருகே சிறிய காட்டாறு ஓட... இரை தேடும் வெண் கொக்குகள் ஆங்காங்கே தன் இரைக்காக காத்திருக்க....பசுமை வயல்வெளிகளை கண்ணுக்கு விருந்தாக்கும் கொங்கு மண்டலத்தின் அழகிய கிராமம் அது....
கிராமம் என்றாலே பசுமைகள் இருப்பதுப் போல் பழமைகள் இருக்கும்.
பழமைகள் மாறாக் கூடாது என்று இன்றும் பல சாம்பிரதாயங்களை கடைபிடிப்பர்... அதில் பொன்சோலை கிராமம் மட்டும் விதிவிலக்கல்ல...
அந்த வெள்ளை மாளிகையினுள் இருந்த தோட்டத்தில் நாற்காலியில் அமர்ந்து பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த கிருபாகரன்..அவர் அருகில் இருந்த தம்பியிடம்
"தினா நாளைக்கு ஒரு பஞ்சாயத்து இருக்குனு அப்பா சொல்லிட்டு இருந்தாரே என்னாச்சு?"
"நம்ப வேந்தன் பார்த்துக்குவான் நீங்க கூட இருந்தா போதும்னு கூட அப்பா சொன்னாரேண்ணா...அதுலாம் வேந்தன் பார்த்துப்பாண்ணா"
"வேந்தன் பார்த்துப்பான் தான்...அவனைப் பத்தி உனக்கு தெரியாதா எல்லாத்துலையும் நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும்னு பார்ப்பான்..அவன் போனா சரியா வருமா..இதுவேற ஊர் பஞ்சாயத்து அவனைப் பத்தி நம்ம ஊரு பசங்களுக்கு தெரியும் வெளியூர் பசங்களுக்கு என்ன தெரியும்.?"
"நம்ப பையனை விட அதுக்கு வேற யார்ண்ணா சரியா வருவா... கவலையை விடுங்க வேந்தன் பார்த்துப்பான்." என்றார் தினகரன்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அழுத்தமான நடை சத்தம் அவர்களின் காதை எட்டியது. இருவரும் ஒரு சேர வாசலை நோக்கினர்.
தனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வேகமாக உள்ளே வந்தவன்," முருகா என்ன அந்த பட்டன் ரோஸ் செடி காயுது ஒழுங்கா ஊரம் வைக்கறியா? இல்லையா?, மணி பிளாண்ட் கூட சரியா வரவே மாட்டிங்குது..உனக்கு ஒரு செடியைக்கூட ஒழுங்கா வளர்க்க தெரியாதா?, இனி செடி ஒழுங்கா வளரலைன்னா நான் ஆள் மாத்த வேண்டியிருக்கும்" என்றான் அதிகாரமாக. ..
அவன் அதிகாரத்தில் முருகன் எனப்பட்டவன் ஒரு நிமிடம் ஆடிதான் போனான்...
வேகமாக ஓடி வந்து அவன் முன் கைக்கட்டியவன்...
"நேத்து நீங்க சொன்ன உரம் தான் ஐயா வெச்சேன்...மணிபிளாண்ட் கூட போன வாரத்தைக் காட்டிலும் நாலு இலை அதிகமா விட்டுருக்குய்யா..." என்று பம்பியவன் உள்ளுக்குள்ள "இதுக்கு மேல எப்படி வளருமா? அதுக்கூட சேர்ந்து நானும் வளர்ந்தா தான் உண்டு போல" என்று புலம்பினான்.
முருகன் சொன்ன கடைசிப் பாதியை விட்டுவிட்டு முதல் பாதியை மட்டும் பிடித்துக்கொண்டவன், "அப்போ செடிக்கு தண்ணி விடலையா உரம் மட்டும் வெச்சிட்டு விட்டுட்டியா?" என்றான் தோரணையாக.
"நீங்க உரம் தானே வைக்க சொன்னங்கனு" என்று தலையை சொறிந்தவனை அனல் பார்வை பார்த்தவன்.."சோறு போட்டா குழம்பு ஊத்திக்காம சாப்பிடுவியா? " என்றான் வேகமாக
"இதோ ஐயா தண்ணி பாச்சறேன்" என்று பம்பியப்படியே ஓடியவனால் அங்கிருந்த மற்ற வேலையாட்களும் தன் வேலையை ஒழுங்காக செய்ய..."முருகா இங்க வா"என்று மீண்டும் அழைத்தான்.
"சொல்லுங்கயா?"
"அது என்ன அந்த ரெட் கலர் ரோஸ் இவ்வளவு பூ வெச்சிருக்கு செடியும் புதுசா இருக்கு, எப்போ வாங்குன?"
"நம்ப அருவி அம்மிணி தாங்க வாங்கிட்டு வந்தாங்க அவங்களுக்கு சிவப்பு கலர்னா ரொம்ப பிடிக்கும்னு.. போன தடவை வந்தப்ப வாங்கிட்டு வந்து அவங்க கையாலையே வெச்சிட்டு போனாங்க.. இந்த முறை அவங்க வந்ததும் பூ கொத்து கொத்த பூத்துருக்குங்கய்யா அம்மிணி கை அப்படிங்க..." என்றான் கடைசியாக அவன் வாயை விட..
"அப்போ ஒன்னு பண்ணு உங்க அம்மிணியை வெச்சே இங்க இருக்கற எல்லா செடியையும் மாத்தி நடு... பூவா பூத்து கொட்டும் "
"அவங்களே லீவுக்கு வந்துருக்காங்க...வேலை செஞ்சா கை நோகுங்க ஐயா, பாவங்க நானேப் பார்த்துக்கறேன்"
"நீ பார்த்த லட்சணம் தான் தெரியுதே" என்றவன் "அவளும் தின்னுபுட்டு சும்மாதான் சுத்திட்டு இருக்கப் போறா... செஞ்சா ஒன்னும் குறைஞ்சிட மாட்டா..." என்றவன் சுற்றி வேலைப் பார்ப்பவர்களை ஒருப் பார்வை பார்த்தவாரே கிருபாகரனின் அருகில் சென்றவன்.
"என்ன இன்னைக்கு நேரமா வந்துட்டீங்க போல.. எவ்வளவு தூரம் வரைக்கும் போனீங்க?" என்றவாரே அவர் கையில் இருந்த பேப்பரை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான்
"களத்து மேடு வரைக்கும் போனோம் வேந்தா.. அதுக்கு மேல இந்த வயசானாக் காலத்துல நடக்க முடியாது சாமி என்ற கிருபாகரனை...
பேப்பரை விலக்கி ஒரு பார்வைப் பார்த்தவன், "இனி வாய்க்கா மேட்டு வரைக்கும் வாக்கிங் போகல காலையில் ராகி களி தான் சாப்பிட குடுக்க சொல்லுவேன்" என்று சொல்லிவிட்டு மாளிகைக்குள் நுழைந்தான் அவன் பின்னே அண்ணன் தம்பி இருவரும் உள்ளே நுழைந்தனர்.
வீட்டின்னுள்ளு