Total Views: 172
அப்போ அவன் கழுகு போல உனக்காக காத்திருந்த நேரத்தில நீயாவே உன்னோட வலையில போய் சிக்கி கிட்ட.ஒரு நாள் உன் பிரண்ட்ஸ் கூட நீ மால்ல இருந்து வெளியே போகும் போது அவன் மேல மோதி இருக்க.
ஆனா உனக்கு அவனை பெருசா அடையாளம் தெரியாததால அத பெருசா நீ கண்டுக்காம பிரண்ட்ஸ் கூட பேசிட்டு சாரின்னு சொல்லிட்டு போயிருக்க.
அடுத்த இரண்டாவது நாள் தான். அவன் உங்க அப்பா அம்மா முன்னாடி வந்து நின்னு இருக்கான்.
அவனை நீ அடிச்சிட்டு , போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்த உடனே அவனை அந்த கடையில இருந்து வேலையை விட்டு தூக்கிட்டாங்க.
அதுக்கப்புறம் ,அந்த கடைக்கு நீ துணி எடுக்க இன்னொரு நாள் போயிருக்க.நீ துணி எடுக்க போனப்ப என்று விட்டு அமைதி காத்தான்.
" சொல்லுடா என்ன ஆச்சு "என்று கேட்டாள்..
அமுதன் திணறலுடன் "நா..நா..நான் சொல்வேன்டி ஆனா" என்று விட்டு அமைதி ஆனான்.
அவள் மேலே செல்லுமாறு அவனது கண்களையே உற்று பார்த்துக் கொண்டு நின்றாள் .
"நீ டிரஸ் சேஞ்ச் பண்ணும் போது அவன் வீடியோ எடுத்துட்டான் ".
அந்த கடையில அவனோட ஃப்ரெண்ட் ரெண்டு மூணு பேரு வேலை செஞ்சிட்டு இருந்து இருக்காங்க .நீ அந்த கடைக்கு வந்ததை அவன் கூட இருந்த பிரெண்ட் எவனோ ஒருத்தன் அவனுக்கு போன் பண்ணி சொல்லி இருக்கான்.இவனும் உடனே அங்க வந்து இருக்கான் .வந்தவன் பழையபடி அவனோட கூட்டாளிகளை வெளியே வேவு பார்க்க நிக்க வச்சுட்டு நீ டிரஸ் மாத்துறத வீடியோ எடுத்து இருக்கான்.
அவனது சட்டையை பிடித்தவள். "அ ...அ..அமுதா உண்மையா வா "என்றால் திக்கி திணறி ..
"ஆமாண்டி "என்று அவளது கையை இறுக்கி பிடித்தான்.
"நீ ...நீ..நீ ...அது...அ...அ..அந்த வீடியோவை பார்த்தியா?.. முகி பார்த்தான" என்றால் .. அதிர்ச்சியுடன் அழுகையும் ,தேம்பலுமாக..
அவளை தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டவன்.உன் அண்ணன் பார்த்து இருக்க முடியாது டி .இப்படி ஒரு விஷயம் இருக்கு என்று வேண்டுமானால் அவனுக்கு தெரிந்து இருக்கலாம் .
இன்னும் சொல்லப்போனால் நான் பார்த்தது .உன் அண்ணனுக்கு தெரியாது .
"அ...அ..அப்போ உனக்கு மட்டும் எப்படி தெரியும்" என்றால் ..
"எனக்கா.. நான் அன்னைக்கு கோவில்ல உன் கழுத்தில தாலி கட்டுனதுக்கு அப்புறம் என்னடி வேலை எனக்கு"..
ஒரு மாசம் நான் செய்தது தப்புன்னு குற்ற உணர்ச்சில அலைஞ்சேன் தான் இல்லன்னு சொல்ல மாட்டேன் .அது மட்டும் இல்லாம" உன் கழுத்தில் நான் தாலி கட்டிட்டு உன்ன அப்படியே அங்கேயே விட்டுட்டு வந்தவுடன் உன் அண்ணன் என்னை சும்மா விட்ருவான்னு நினைச்சுட்டியா?" அங்க அத்தனை பேர் முன்னாடி என்னை விட்டுக் கொடுக்காம அவன் பேசி இருந்திருக்கலாம் டி . எனக்கு சப்போர்ட் பண்ணி அவன் அங்க எதை வேணாலும் பண்ணி இருந்திருக்கலாம்.
ஆனால் ,அடுத்த அரை மணி நேரத்துல என்னை தேடி வந்துட்டான் .வந்தவன் முதலில் என்னை தூக்கி போட்டு மிதிக்க தான் செஞ்சான். அவன் அடிச்ச அடியில ரெண்டு மூணு இடத்துல அடி பலமா இருந்துச்சு. ஹாஸ்பிடல்ல ஒரு வாரம் அட்மிட் ஆகி இருந்தேன்.
அந்த தழும்பு கூட இருக்கு பாரு என்று தனது இடுப்பை காட்ட ..அங்கு தழும்பு இருக்க ..அதை லேசாக தொட்டு தடவி "வலிக்குதா அமுதா "என்றால் ,ஏதோ நேற்று தான் நடந்தது போல ,அவன் வலியை இவளும் உணர்ந்தது போல கண்கள் கலங்க கேட்டாள்.
அவளைப் பார்த்து சிரித்து கொண்டே.. அவலது கைகளை இறுக்கிப்பிடித்தவன். தனது சட்டையை கிழே இறக்கி விட்டான். அவளது தலையில் லேசாக தட்டிவிட்டு லூசு இது நடந்து ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுதடி என்றான்.
அவனது நெஞ்சிலே குத்தியவள்."இருந்தாலும் வலிக்க தான செஞ்சிருக்கும்" என்றாள்.
உன் வலியை விட இது பெரிய வலி இல்லடி என்று வருத்தத்துடன் சொன்னான்.
நித்யா கண்களை மூடி திறந்தவள் .அதை பத்தி இனி பேச வேணாம் அமுதா என்றாள். அவனும் சிரிப்புடனே இதுக்கு மேல பேச மாட்டேன் டி இன்னையோடு சரி.இனி நாம அத பத்தி நினைக்க கூடாது என்பதற்கு தான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கேன்.
ஆனா அவன் என்றால். அவனை போலீஸ்ல ஆதாரத்தோடு பிடித்து கொடுத்தாச்சு .எப்படியும் உன் அண்ணன் கல்யாணத்துல சிக்குவான்னு பிளான் பண்ணி தான் வச்சிருந்தேன் .ரொம்ப நாளா தலைமறைவா இருந்தான். அவனை தேடிட்டு தான் இருந்தது.இப்போ எப்படியும் இந்த கல்யாணத்துக்கு வருவான் என்று நினைத்தோம். அதான் ஏற்கனவே நான் சேகரித்து வச்சிருந்த எல்லா ஆதாரத்தையும் போலீஸில் கொடுத்து அவன் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துருந்தேன்.
எப்படியும் உன் கண்ணுல படுற மாதிரி தான் வருவான்.உன்ன மிரட்ட , உன்ன பயமுறுத்த வருவான் என்று நினைத்தேன். அதனால தான் அவ்ளோ வேலைக்கு நடுவுல என் கண்ணு முழுக்க முழுக்க உன்னவே சுத்திட்டு இருந்துச்சு அதனாலதான் நீ பயந்துட கூடாதுன்றதுக்காக வேகமாக உன் பக்கத்திலேயே வந்தேன் .
அதே சமயம் முகியோட கல்யாணமும் நல்லபடியா நடக்கணும். எந்த தடங்கலும் இல்லமா, நான் போலீசுக்கு கண் காமிச்சிட்டு உன்னையே கூட்டிட்டு அவனை விட்டு நகர்ந்து விட்டேன். போலீஸ் கூட்டத்தோடு கூட்டமா சாதாரண டிரஸ்ல கல்யாணத்துக்கு வந்து மக்கள் மாதிரி தான் உட்கார்ந்து இருந்தாங்க .அதனால ,அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
கல்யாணம் முடிஞ்ச உடனே போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு கையெழுத்து போட்டுட்டு வந்துட்டேன்டி இனி அவனைப் பத்தி நீ யோசிக்காத.
அவன் அந்த வீடியோ வச்சு உங்க அப்பா ,அம்மாவை மிரட்டுனான் டி . உங்க பொண்ண எனக்கு கட்டி வைக்கல அப்படின்னா அந்த வீடியோவை நெட்ல போடுவேன் என்று மிரட்டி இருக்கான்.
அந்த பயத்துல தான் உங்க அப்பா ,அம்மா அந்த முடிவு எடுத்திருக்காங்க .உன் அண்ணனும் அந்த நேரம் இங்கே அவங்க பக்கத்துல இல்ல. இருந்தாலும், இந்த விஷயத்தை உன் அண்ணன் கிட்ட சொல்லனும்னு நெனச்ச உங்க அம்மா தான் அவங்க போன் புடுங்கி வச்சுக்கிட்டதால உன்னோட போனை தேடி கண்டுபிடிச்சு உன்கிட்ட நகர்த்தி வச்சு இருக்காங்க.
அவன் மத்த பொண்ணுங்க கிட்ட எல்லாம் வீடியோ காமிச்சு மிரட்டி அந்த பொண்ணுங்களோட கற்பை சூறையாட நெனச்சி இருக்கான். ஆனா உன்கிட்ட அப்படி எதுவும் நேரடியா பண்ணாம உன்ன கல்யாணம் என்று போர்வையில் லைஃப் லாங் உன்னை வேதனைப்பட வைக்கணும்னு நினைச்சு இருக்கான்.
அதுக்காக உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வாழனும் என்ற அளவுக்கு இல்ல. உன் கழுத்துல தாலி கட்டி உன் கூட ஒரு நைட் இருந்துட்டு உன்னை விட்டுட்டு போற மாதிரி யோசிச்சு பிளான் பண்ணி இருக்கான்.
இது எல்லாத்தையும் நம்ம கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம் கழிச்சு அவனை நான் தேடி புடிக்க போகும்போது தெரிஞ்சுக்கிட்ட விஷயம் .அவனோட ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க .ஆனா அன்னைக்கு மிஸ் ஆயிடுச்சு . அவனை பிடிக்க முடியல ஓடிட்டான்.
அதற்கு அப்புறம் தான் முழுமூச்சோடு அவனைத் தேட ஆரம்பிச்சேன் என் பக்கம் இருந்து ஆளுங்கள வச்சு.
"அ... அ.. அந்த வீடியோ "என்று திரும்ப ஆரம்பித்தால் .அந்த வீடியோ இப்போ இல்லடி நம்பு என்றான்.
"ஆனா , அ..அ..த என்ன பண்ண? நீ .நீ...நீபார்த்துட்டியா?" என்று வருத்தத்துடன் வெளிவந்தது அவளது குரல்..
நான் தாண்டி பார்த்தேன் .வேற யாரும் பாக்கல டி . அந்த பொறுக்கி பார்த்தான் தானே..என்றால் அழுகையுடன் ..
டிரஸ் தாண்டி சேஞ்ச் பண்ண .சரியா ?மொத்த உடம்பையும் பார்க்கல என்றான் லேசான எரிச்சலுடன் திரும்பத் திரும்ப தான் அதைப் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லியும் அவள் அதையே நினைத்துப் பேசவும் எரிச்சல் மண்டியது. ..
இருந்தாலும் ,அவளை இழுத்து தன்னோடு புதைத்துக் கொண்டவன். அவன் பார்க்கல நித்தி நம்பு டி. நான் பாக்க கூடாதா உன் உடம்ப ..என்று லேசான வருத்தத்துடன் கேட்டான்
ஆனாலும் ,"அந்த மாதிரி நிலைமையிலா "என்று திக்கு திணறினாள்.
"எந்த மாதிரி நிலைமையில் டி அங்கு ஒண்ணும் இல்லை .நீயா எதையாவது மனசுக்குள்ள போட்டு குழப்பிக்காத சரியா ?"என்று தலையை கோதி விட்டு தலையை நெஞ்சுக்குள் சாய்த்து தட்டி கொடுத்தான்.
வேகமாக அவனது நெஞ்சில் இருந்து எழுந்தவள்" முகி கிட்ட இதுவரைக்குமே நீ என்ன எப்ப இருந்து விரும்புறேன்னு சொல்லலையா "என்று கேட்டாள் .
சிரித்துக் கொண்டே இல்லை என்பது போல் தலையாட்டினான் .