இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பார்வை 40 அனைத்து பாகங்கள் படிக்க
By கனிசுரேஷ் Published on 19-03-2025

Total Views: 332

"பொய் சொல்லாதடா" என்றாள் அவனை முறைத்துக் கொண்டே நித்யா.

"உண்மையாவே நம்பு டி". உன் அண்ணனை கேட்டாலே சொல்லுவான் .

"அவன் உனக்கு தான சப்போர்ட் செய்வான்" என்றாள்.

" மரியாதை கொடு நித்து, இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சு "இப்போ உன்னோட அண்ணன் மட்டும் கிடையாது ஒரு பொண்ணுக்கு புருஷன் மறந்துடாதா என்றான்.

"நான் உன்கிட்ட தான் பேசுறேன். அடுத்தவங்க கிட்ட பேசும் போது மரியாதை கொடுத்து பேசுவேன்.எனக்கும் கொஞ்சம் நஞ்சம் மேனாஸ்  தெரியும்" என்றாள் .

சிரித்துக் கொண்டே ..சரி சரி என்று விட்டு இப்போ வரைக்கும் நான் அவன்கிட்ட உன்னை லவ் பண்றத பத்தி பேசல . ஆனா உன் அண்ணனும் நம்ப ரிசப்ஷன் முடிஞ்சு ஆபீஸ்க்கு முதல் முறையா கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் வரும்போது என்னோட ரூம்ல இருக்க பெயிண்டிங் பார்த்து ஒரு நிமிஷம் அதிர்ச்சியாகி தான் என்ன பார்த்தான்.

அப்ப கூட என் கிட்ட ஏதோ கேட்க வந்தவன். அமைதியா நானே சொல்லுவேன்னு நினைச்சான என்னன்னு  தெரியல விட்டுட்டான் .அதேபோல நம்ம ரூம்லயும் ஒரு நாள் என்னை கூப்பிட வந்தவன் பாத்துட்டு அமைதியா விட்டுட்டான் .

இதுவரைக்கும் அவனும் என்கிட்ட கேட்கல ,நானும் இத பத்தி பேசல. என்னோட காதல உன்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு  நினைச்சேன். அவன் கிட்ட சொல்ல நினைக்கல என்றான்  சிரித்துக் கொண்டே.

அவனது நெஞ்சில் அடித்துக் கொண்டே சாய்ந்து கொண்டாள். அவளது தலையை கோதி வருடி கொடுத்தவன். அசதியா இருக்கு டி தூங்கலாம் என்றான். அவளுக்குமே ஒரு மாதிரியாக இருக்க சரி என்று தலையாட்டி விட்டு தன் காதல் தனக்கே தனக்காக கைக்கூடிய சந்தோஷத்தில் அவனது நெஞ்சில் தலை சாய்த்து உறங்கி இருந்தாள்.

அமுதனும் சந்தோஷத்தில் உறங்கி இருந்தான். மறுநாள் விடியலில் எழுந்து கீழே வந்த வினிதா. ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க சுற்றி பார்த்தவள் சமையல் அறைக்குச் சென்றாள் .அங்கு சாந்தி டீ போட்டுக் கொண்டிருக்க. அத்தை நான் போடுறேன் என்றாள்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம்  இல்லடா வினிதா என்றார். "ரொம்ப நேரம் தூங்கி பழக்கம் இல்ல டெய்லி எழுந்திருக்கும் நேரத்தில் முழிப்பு வந்துடுச்சு என்று சிரித்துவிட்டு எங்கே யாரையும் காணோம் இன்னும் யாரும்  எழுந்திருக்கலையா "என்று கேட்டாள்.

"மாமா வாக்கிங் போய் இருக்காரு வெளியே கார்ட்டன்ல தான் இருப்பாரு. முகிலன் எழுந்து விட்டானா ,இல்ல தூங்கிட்டு இருக்கானா "வினிதா என்றார் சாந்தி .

எழுத்துட்டாரு அத்தை குளிச்சிட்டு இருக்காரு என்றாள். சரி என்று  சிரித்தவர்" டீயா காபியா" என்றார்.

அத்தை நான் போடுறேன் என்று கேட்க. செய்யலாம் வினிதா ஆனா.இப்போ வேணாம். பொறுமையா என்று சொல்லிவிட்டு தனது மருமகளுடன் பேசிக்கொண்டே அவளது கையிலும் ஒரு கப்பை திணித்தவர். ஹாலுக்கு அழைத்துக்கொண்டு வந்தார் .

இருவரும் பேசிக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருக்க. படிகளில் இறங்கி வந்த முகிலன்  தன் மனைவியை  தான் அங்குல அங்குலமாக ரசித்துக் கொண்டே  வர.

அவனுடைய பார்வை ஒவ்வொரு இடமாக கீழே இறங்கிக் கொண்டே வந்தது. நெற்றி,கண் ,காது ,மூக்கு என்று கீழே இறங்கியது. அவளுடைய பேக் கீழே இருக்க. அவன் எடுத்து வைத்திருந்த புடவையில் ஒன்றுதான் கட்டிக்கொண்டாள்.

நெற்றியில் இருந்து ஒவ்வொரு இடமாக அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டே வர, ரூமில் இருந்து வெளியில் வந்த நித்யா "டேய் அண்ணா நீ விடுற ஜொள்ளுல மூழ்கிடுவோம் போல குடும்பத்தோட" என்று சிரித்தாள்.

அமுதன் அவளது தலையில் கொட்டி விட்டு  "அமைதியா இரு டி இன்னும் சின்ன புள்ளனு நினைப்பா" என்று முறைத்தான்.

முகி ஒரு நிமிடம் தன் தங்கையின் பேச்சில் அவளை முறைத்தான். பிறகு சிரித்துக் கொண்டே தன் தலையை கோதி கொண்டே தன் காதல் மனைவியை பார்த்து கண்ணடித்தான்.

நித்யா கேட்டவுடன் படிகளில் திரும்பிப் பார்த்தவள் .முகிலன் கண்ணடித்துடன் அவனை மறைத்து விட்டு ,கீழே குனிந்து கொண்டாள் .

"அண்ணி இந்த  சேரியில் செமையா இருக்கீங்க" என்று நித்யா தாடையில் முத்தம் வைத்து கொஞ்சினாள். 'நான் பண்ண வேண்டியது எல்லாம் இந்த நாயி  பண்ணிட்டு இருக்கு ,எனக்கு என்னைக்கு கொடுத்து வச்சிருக்கோ 'என்று முகிலன் லேசாக முனக .

"அதுக்கு நீ தான் மச்சான் ஸ்டெப் எடுத்து வைக்கணும்" என்றான் அருகில் வந்த அமுதன் .

"எப்படித்தான் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் மூக்கு வேர்த்து வந்து சேருவீங்களோ "என்று முறைத்தான்.

"சரி விடு மச்சான் பாத்துக்கலாம் வா" என்று அவன் தோளில் கைபோட்டு அழைத்துக் கொண்டு வந்தான்.

பிறகு அனைவரும் ஒன்றாக சிரித்து பேசி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். கலை 9:00 மணி போல் வினிதாவின் அத்தை ஜானகி தனது குடும்பத்துடன் மறு வீட்டு அழைப்பிற்கு வந்து கூப்பிட வந்திருந்தார்.

வினிதா ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டு இருக்க .சாந்தி தான் "கல்யாணம் முடிஞ்ச பொண்ணு மறு வீட்டுக்கு போயிட்டு தன்னுடைய பிறந்து வீட்ல ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வருது தாண்டா வழக்கம் "என்றார் .

சரி என்று விட்டு அமைதி ஆனாள்."போயிட்டு கிளம்புங்க ரெண்டு பேரும்" என்றார் சாந்தி . வேகமாக படிகளில் ஏறி தன்னுடைய ரூமுக்கு சென்றான் முகிலன்.

வினிதா அவன் பின்னாடியே ஒரு சில நொடி தயங்கி நின்றுவிட்டு  ரூமுக்கு வந்தவள்." உங்களுக்கு அங்க வந்து தங்குவதில் ஒன்னும் பிரச்சனை இல்லையே "என்று கேட்டாள் .

வேறொரு சட்டையை மாற்றிக் கொண்டிருந்த முகிலன் சட்டை பட்டனை போட்டுக் கொண்டே அவளது அருகில் வந்து " எனக்கு என்ன பிரச்சனை ?"என்றான்.

"இ..இ..இல்ல எங்க வீட்ல ஸ்டே பண்ண" என்றாள்.ஆமா" உங்க வீட்ல ஸ்டேட் பண்ணனும் ,இது நார்மல் தான "என்று சிரிப்புடன் கேட்டான். அவனைப் பார்த்து முறைத்தவள் ."நான் நீங்க அங்க ரெண்டு மூணு நாள் ஸ்டே பண்றதால ஒன்னும் பிரச்சனை இல்லையான்னு கேட்டேன்".

அவளது தோளில் கை போட்டவன் "எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, கிளம்பு நீ டிரஸ் மாத்தணுமா? " என்று கேட்டான்.

"இல்ல , எனக்கு இந்த சேரியே ஓகே" என்றாள். " இங்கிருந்து ஏதாச்சு எடுத்துட்டு போகணுமா ?"என்று கேட்டான்.
"என்னுடைய டிரஸ்ஸஸ் தான் அங்க இருக்குல்ல .அதை போட்டுக்கிறேன் அதனால எதும் இல்ல" என்றாள்.
"ஒகே கிளம்பலாமா "என்று தனது சட்டையின் மேல் பட்டணை போட்டுவிட்டு தலையை கோதினான் .

அவளது இரு தோளிலும் பின்பக்கம் இருந்து கை போட்டவன். கண்ணாடி அருகில் அழைத்துக் கொண்டு சென்று அங்குள்ள குங்குமச்சிமிழ் எடுத்து அவளது நெற்றி வகிட்டில் வைத்து விட்டான். 

அவள் தோள் மீது கை போட்டு கீழே அழைத்துக் கொண்டு  படிகளில் இறங்கி வரும் போது எதார்த்தமாக அதை பார்த்த அமுதன் வேகமாக விசில் அடித்தான் .

அவனது அருகில் வந்த நித்யா "தலையில் கொட்டி விட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க "என்று முறைத்தாள்.

"செம ஜோடி ரெண்டு பேரையும் பார்க்க நல்லா இருக்குடி ,அதான் ஒரு எக்சைட்மெண்ட்ல என்னையும் மீறி விசில் அடிச்சுட்டேன்". ஆனாலும் உங்க அண்ணன் பரவால்ல டி.ஒரே நாள்ல எப்படியோ வினிதாவை சமாளிச்சுட்டான் போலவே" என்று சிரித்தான்.

"ஆமா ,கிழிக்கிறான் போ. அண்ணி ஏதோ பெரியவங்க இருக்காங்கன்றதால அமைதியாக இருக்கிறாங்க என்று நினைக்கிறேன் நீ வேற "என்றால்.

"அது என்னவோ உண்மைதான் "என்று சிரித்துவிட்டு அமைதியானன் அமுதன்.

தனது அண்ணன் அண்ணியை மறு வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு .. நித்யா தனது பெற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு தன் புகுந்து வீட்டிற்கு திரும்பி இருந்தாள். 

முகிலன் வினிதா இருவரும்  வினிதா வீட்டிற்கு சென்றவுடன் ஆரத்தி எடுத்து ஜானகி உள்ளே வரவேற்றார் ."என்ன வினிதா பிறந்து வளர்ந்த  வீட்டுக்கு   வருவதற்கு  கூட மனசு இல்ல போல "இன்று அருண் மறைத்துக் கொண்டே கேட்டான்.

திருத்திருன்னு முழித்துக் கொண்டு நின்றாள் வினிதா.

" அம்மா மறு வீட்டுக்கு அழைக்க வந்த உடனே அமைதியா இருந்தியாமே கேள்விப்பட்டேன் கேள்விப்பட்டேன்" என்று அருண் சிரித்துக் கொண்டே சொன்னான் 

"போடா தடிமாடு" என்று அவன் தோளில் அடித்தவள். நான் அவருக்கு இங்க வந்து தங்குவதில் ஏதாவது பிரச்சனையா என்று தான் யோசிச்சேன் டா என்றாள். அவன் அருகில் வந்து அவனுக்கும் மட்டும் கேட்குமாறு.


"ஏன் பிரதர்  நம்ம வீட்ல தங்குவதில்  அவருக்கு என்ன பிரச்சனை.அதுவும் உன் கூட தங்க யோசிப்பாரு என்ன? மேல அம்புட்டு ஒரு லவ்வு டி"என்று சிரித்தான்.


அப்போது , டேய் இப்போ அவ உன்னோட மாமா பொண்ணு மட்டும் கிடையாது ,முகிலன் தம்பியோட பொண்டாட்டி அதனால ஒழுங்கா பேர் சொல்லி மட்டும் கூப்பிட பழகு என்றார் ஜானகி.

இருவரும் முகிலனை திரும்பிப் பார்த்தார்கள். 


Leave a comment


Comments


Related Post