Total Views: 235
அத்தியாயம் 8
வீட்டினுள் நுழைந்தவனுக்கு அத்தனை கோபம் மனைவியின் மீது,"பூரணி..." என கத்தி அழைக்க சித்துவோ சற்று அதிர்ந்து திரும்பினான்.
"ஏன் இப்படி கத்துறீங்க... சித்து பயப்படறான் பாருங்க..." என்றவள் "ஒன்னுமில்லடா... மாமா சும்மா விளையாட்டுக்கு கூப்பிடறாரு...." என்க.
"மதன்... ஏன் இப்படி கத்துற அவகிட்ட இப்படிலாம் சத்தம் போட்டு பேசாத...." என்றாள் அன்பு.
"பேசாம என்ன பண்ண சொல்ற இங்க வந்த நாளா நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறா ஒரே அடம் எதுக்கெடுத்தாலும்..." என அவன் சலிப்பாக கூற.
"உங்க தங்கச்சி வந்ததும் என்னப்பத்தி போட்டு கொடுக்குறீங்க இல்ல இருங்க உங்கள பேசிக்கிறேன்..."என்க.
"பேசாத... எனக்கு வர கோபத்துக்கு இப்ப நீ உண்டாகலன்னா கன்னம் பழுக்க ரெண்டு கொடுத்துருப்பேன்..." என்றான் மதன்.
பூரணி திடுக்கிட்டு அதிர்ந்தாள் அவனின் வார்த்தையில் பின்னே இருக்காதா இதுவரை தன்னிடம் அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவன் இன்று கன்னத்தில் அறைவேன் என கூறியது அவளுக்கு அதிர்ச்சியை கொடுக்க அவளது முகமோ அவனின் வார்த்தைகளை கேட்டு அவள் அதிர்ந்துவிட்டாள் என்பதை அப்பட்டமாக அவர்கள் இருவருக்கும் காண்பித்தது.
அன்புதான் "மதன் இப்ப என்ன பண்ணிட்டான்னு அவள இப்படி பேசிட்டு இருக்க பூரணி வா பசிக்குது சாப்பிடலாம்..." என அழைக்க அவளோ பதிலுரைக்காது அமைதியாக இருப்பது கண்டு இப்போது மதனுக்குமே சற்று அதிர்ச்சியானது பொதுவாக இந்த மாதிரி முகத்தை திருப்புபவள் இல்லை பூரணி ஆனால் இன்று தான் சற்று அதிகப்படியாக பேசிவிட்டோமோ என ஒருநிமிடம் மதன்கூட எண்ணிவிட்டான் ஆனாலும் தான் இத்தனை முறை எச்சரித்தும் கேளாது அந்த சரவணனுடன் பேசியது அவனுக்கு மிகுந்த கோபத்தை உருவாக்கி இருக்க அதன் வெளிப்பாடு தான் அவள் மீது இந்த அதீத கோபம்.
"ஏய்... அவ கூப்பிடறா.. நீபாட்டுக்கும் அமைதியா உக்காந்துட்டு இருக்க இப்ப எழுந்து வந்து சாப்பிட போறியா இல்லையா...?"என அவன் கேட்க.
மதன் போட்ட சத்தத்தில் இப்போது அதிகமாக அதிர்ந்து சித்து அழ ஆரம்பித்தான்.
சட்டென பூரணி அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் "ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல..." என அவன் முதுகை வருடிவிட்டுக் கொண்டே மதனை பார்த்து முறைத்தவள் "அறிவில்லையா உங்களுக்கு பையன் முன்னாடி இப்படி கத்திட்டு இருக்கீங்க...?" என கேட்க.
"வந்து சாப்பிடு...." என அழைத்தான் அவன்.
அவனை பார்த்து உதட்டை சுழித்தவள் "வாடா செல்லம்...." என சித்துவை கையோடு அழைத்துக் கொண்டு வந்து "இந்தாடி நாத்தனாரே வந்ததும் உன் வேலைய ஆரம்பிச்சிட்டியா போதுமா இப்ப சந்தோஷமா உனக்கு..." என கேட்க.
அவளை ஒரு பார்வை பார்த்தவள் மதன் வாங்கி வந்த உணவு பொட்டலங்களை பிரிக்க ஆரம்பித்தாள் இதழோரம் சிரிப்பு தேங்கி இருந்தது.
அதை கண்ட பூரணி "ச்சே... வாடா தங்கம் ஒரு ஈ காக்காக்கூட நம்மள மதிக்க மாட்டீங்குது.... நாம சாப்பாட்ட ஒரு புடி புடிக்கலாம்..." என கூறிவிட்டு சித்துவோடு வந்து அமர்ந்தாள்.
அவளை முறைத்தபடி மதனும் கை அலம்பிக் கொண்டு வந்து அமர்ந்தான்.
சித்துவிற்கு இட்லியை புதினா சட்னியில் தொட்டு ஊட்ட ஆரம்பித்தவள் அவ்வப்போது தன் வாய்க்குள்ளும் போட்டுக் கொண்டாள்.
அவள் தலையில் கொட்டிய மதன் "இவளலாம் திருத்த முடியாது அன்பு..."என்க.
"போதும் சாப்பாடு ஆறுது...." என்றாள் அவள்.
அவனை முறைத்தவள் "ஏய் என்ன நாங்க சாப்பிடறத பார்த்து கண்ணு வைக்கிறியா உள்ள இருக்க என் புள்ளைக்கு ஏதாச்சும் ஆச்சு உன்ன உண்டு இல்லன்னு பண்ணிடுவேன் பாரு..." என அன்புவை மிரட்ட "போதும் என்ன மிரட்டினது... நானும் பயந்துட்டேன்... முதல்ல சாப்பிடு வயித்துல இருக்க என் மருமக பசியில இருக்க போறா..."என்க.
"ஒரு மாசமா இருக்க பொண்ணுன்னு கூட பாக்காம அண்ணனும் தங்கச்சியும் என்ன கொடும பன்றீங்க இல்ல இருங்க உங்கள கொட்டத்தை அடக்க என் சிங்கக்குட்டி வருவான் அப்ப பார்த்துக்கிறேன் உங்கள..." என்க.
"அடச்சீ...வாய மூடு முதல்ல சாப்பிடு பையனுக்கும் ஊட்டிவிடு...." என்க.
"யாரும் சொல்லத்தேவயில்ல எனக்கு தெரியும் ம்ஹும் நீ வாடாத்தங்கம் நாம சாப்பிட்டு வயித்த நிரப்புவோம்..." என்றவள் அவர்களை முறைத்தபடி உண்ண ஆரம்பித்தாள்.
அன்பும் மதனும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு உணவில் கவனம் செலுத்தினர்.
உண்டு முடித்தவைகளை எடுத்து வைத்து விட்டு சித்துவும் பூரணியும் கார்ட்டூனில் மூழ்கிவிட அன்புவும் மதனும் ஏதோ பேசியபடி அமர்ந்து இருந்தனர்.
அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு மதன் போய் கதவை திறக்க வாசலில் சரவணன் நின்றிருந்தான் கையில் ஒரு சில்வர் பாத்திரம் இருக்க அதையும் அவனையும் மாறி மாறி பார்த்தவன் "என்ன வேணும்...?" என கேட்க.
"பூரணி சிஸ்டருக்கு இத எங்க அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க...." என எதையோ கொடுக்க
"தேவையில்ல எடுத்துட்டு போ..." என்றான் அவன் முகத்தில் அடித்தாற்போல அவனோ ஒரு நிமிடம் முகத்தை சுருக்கி பின் தெளிந்தவன் "இல்ல அது அவங்க உண்டாகியிருக்காங்க இந்த டைம்ல இதெல்லாம் பொண்ணுங்க சாப்பிட ஆசைப்படுவாங்களாம் அதான்..." என இழுத்தான்.
பேச்சு மதனுக்காக இருந்தாலும் பார்வை என்னவோ உள்ளே அமர்ந்து இருந்த அன்புவின் மேல்தான் இருந்தது.
அதில் எரிச்சலுற்றவன் "இங்கப்பாரு...."என்க.
"ஏன் என்னை பார்த்தாவே சிடுசிடுன்னு இருங்கீங்க..."என அவன் கேட்க.
"வேண்டுதல் இப்ப என்ன அந்த பாத்திரத்த வாங்கனுமா கொடுங்க...." என அவன் கை நீட்ட அவன் கொடுக்கும் முன் அவன் முன்னால் தன் பூங்கரத்தை நீட்டி இருந்தாள் அன்பு?
மதன் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
"நன்றிங்க..." என அவளின் கையில் கொடுத்தவன் அவளது கரத்தை தடவிவிட்டே கொடுக்க உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை வெளியில் காட்டாதவள் அவனிடம் சிரித்தபடி விடைகொடுக்க இவளுக்கு எல்லாத்துக்கும் ஒகேபோல அதான் நாம கைய தடவினதும் கோபப்படாம சிரிக்கிறா என தவறாக கணித்தான் சரவணன்.
அவன் சென்றதும் "அன்பு என்ன பன்ற ஏன் அத அவன்கிட்ட இருந்து வாங்கின அவனும் அவன் பார்வையும்..." என மதன் கோபப்பட "வீட்டுக்கு வந்தவங்கக்கிட்ட இப்படித்தான் ரூடா பிகேவ் பண்ணுவியா மதன்...." என கேட்க.
"அவன் ஒரு பொம்பள பொறுக்கி இந்த பூரணிக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரியல எல்லோரையும் டக்குன்னு நம்பிடறா உன்ன மாதிரி...." என அவன் முடிக்க அவனின் வார்த்தைகள் அவளை சுட்டது என்னவோ உண்மை.
அவன் பேச்சில் முகம் வாடியவளை பார்த்து தலையில் அடித்து கொண்டவன் "ஏய்... சாரி நான் வேணும்னு அப்படி பேசல ப்ளீஸ் புரிஞ்சிக்க..." என்க.
கண்களில் விழ இருந்த நீரை அவன் அறியா வண்ணம் உள்ளிழுத்துக் கொண்டவள் "ஏய்... நான் ஒன்னும் நினைக்கல நீ எதுக்கு இப்போ வருத்தப்படற அவங்க கொடுத்தது ஆறிடப் போகுது போய் பூரணிக்கு கொடு..." என்க.
"இல்ல வேணாம் அவ வேணும்னு கேட்டா நானே வாங்கித்தரேன் இத நீ டஸ்ட்பின்னுல போய் கொட்டு...." என சரவணன் கொடுத்ததை தூக்கி எறிய "ஏன் இப்படி பன்றீங்க..." என்றபடி அங்கு வந்தாள் பூரணி கையில் சித்தார்த்துடன்.
"அண்ணி அவன தூக்க வேணாம்னு சொன்னா கேளுங்க..."என்றாள் அன்பு.
"சின்னப் பையன்தான அன்பு..." என்றாள் பூரணி பதில் என்னவோ அன்பிற்காக என்றாலும் அவளது பார்வை என்னவோ தன் ஆசை கணவனிடம்தான் இருந்தது.
அவளது பார்வையை உணர்ந்து கொண்ட அன்பு பூரணியிடம் "அண்ணி சித்துவுக்கு தூக்கம் வருது போல நான் தூங்க வைக்கிறேன் கொடுங்க..."என கைநீட்ட.
"இல்ல இன்னைக்கு அவன் எங்கூடவே தூங்கட்டும்..." என்றாள் பூரணி.
"இல்லண்ணி நீங்க கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க..." என்க.
"சரி..." என அரைமனதாக கொடுத்தவள் கணவனை பார்த்து முகத்தை தூக்கிக் கொண்டு அவளது அறைக்குள் நுழைய.
அன்பு மதனை பார்த்தவள் போ என ஜாடை காட்ட அவனோ பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அவனது அறைக்குள் நுழைந்தான்.
இங்கு சித்துவின் முகம் தீனாவின் கண்முன் வந்து அவனை இம்சிக்க அவனோ நிலைகொள்ளாது தவித்தான்.
தன் ரத்தத்தில் உதிர்த்தவனுக்காக பிடிக்காத அவளை தேடி வருவானா அரக்கன்......