இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அன்பெனும் தீயா நீ 9 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 25-03-2025

Total Views: 211

அத்தியாயம் 9

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் மதன்.

அவனுக்கு முதுகை காட்டி படுத்திருந்தாள் பூரணி.

அவள்மீது பார்வையை செலுத்திவன் எதுவும் பேசாமல் கைக்கு கிடைத்த டவலை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்.

பத்துநிமிடத்தில் வெளியே வந்தவனின் பார்வை அவள்மீது படர இப்போதும் அவள் அதே நிலையில் இருக்க.

அவள் அருகில் சென்றவன் பக்கத்தில் படுத்தவன் அவளை தன் பக்கம் திருப்ப முயற்சிக்க அவள் திரும்பவில்லை.

"ஏய்...இப்ப பாக்குறியா இல்லையாடி...?' என கேட்க.

"முடியாது..." என்றாள் அவள்.

"இப்போ மட்டும் நீ திரும்பல அப்பறம் நடக்கறதே வேற..." என்க.


"முடியாது உங்கமேல கோபமா இருக்கேன் அவன்கூட பேசாதன்னா அதுக்கு என்ன அர்த்தம் அப்போ என்ன சந்தேகப்படறீங்க அப்படின்னுதான அர்த்தம்..." என்றாள் அதை சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க. 

"ஏய் எழுந்திரி முதல்ல...." என அவளை வலுக்கட்டாயமாக திருப்பியவன் அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து "ஏய் சொன்னா உனக்கு புரியலையாடி அவன் பார்வையே சரியில்லைடி சொன்னா புரிஞ்சிக்க...." என அவள் கன்னத்தை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு கூற.

அவன் கையை விலக்கிவிட்டவள் "விடுங்க வரவர இப்போலாம் என்மேல ரொம்ப கோபப்படுறீங்க..." என அவள் மீண்டும் உதட்டை பிதுக்க பிதுக்கிய உதட்டை தன் கட்டை விரலால் நீவி சரிசெய்தவன் 

"ஏய் லூசாடி நீ நான் போய் உன்ன சந்தேகப்படுவனா அதில்லடி அழகி நான் சொல்றத கேளு அவன் உன்னை பார்க்கற பார்வையும் சரியில்லை இன்னைக்கு அரசிய பார்த்த பார்த்த பார்வையும் சரியில்லை இது நல்லதுக்கு இல்லன்னு என் மனசுக்கு படுது பூரணி சொன்னா புரிஞ்சிக்க அரசி இங்க நம்மள நம்பி வந்துருக்கா அவளுக்கு நாம தான் முழு பொறுப்பு அவ புருஷன் வேற இங்கதான் இருக்கான் உனக்கு தெரியும்தான அவன் முன்னாடி அவள நல்லா வாழ வைக்கனும் இல்லையா..." என கேட்க.

"ம்ம்ம்ம் அதுக்கும் நீங்க எங்கிட்ட இப்படி கோபப்படறதுக்கும் என்ன சம்பந்தம்...." என குழந்தையாக கேட்டவளை வாரி அணைக்க துடித்த கரத்தை அணைபோட்டு தடுத்தவன் "ஏய் கொஞ்ச நாளைக்கு இந்த சில்மிஷம்லாம் காட்டாம இரு என்னால ஓரளவுக்கு மேல கன்ட்ரோலா இருக்க முடியாம போய்டும் டாக்டர் வேற கொஞ்ச நாளைக்கு எதும் கூடாதுன்னு சொல்லி இருக்காரு..." என்க.

அவன் எதை கூற வருகிறான் புரிந்து கொண்டவளின் முகம் செவ்வானமாக சிவக்க அவன் தோளில் முகத்தை புதைத்தவள் "நீ ரொம்ப மோசம் மதன்...." என்க.

"போடிங்க அதனாலதான் இப்ப பாப்பா வந்துருக்கு..." என்றான்.

"மதன் உன்ன..." என அவன் கழுத்தின் அருகே கையை சென்று கொண்டவளின் கரத்தை பிடித்தவன் "பூரணி, அரசிக்கு இன்னும் டைவர்ஸ் ஆகல ஆனா அவளுக்கும் சின்ன வயசுதான ஆகுது வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன் நீ என்ன சொல்ற..." என கேட்க.

அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டவள் "இதுல நான் சொல்ல என்ன இருக்குங்க நீங்க எது பண்ணாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியாதா என்ன அவளுக்கு இன்னொரு கல்யாணம்லாம் சரிதான் ஆனா நீங்க ஒருதடவைக்கு ரெண்டு தடவ நல்லா யோசிங்க அவ அவ்ளோ சீக்கிரமா இதுக்கு ஒத்துக்க மாட்டா... என்க.

"ஆமா தெரியும் ஆனா என்ன பண்ண அவ வாழ்க்கைய தொலைச்சிட்டு வந்து நிக்கும்போது நாம சந்தோஷமா இருந்தா நல்லாவா இருக்கும் அதுக்காகன்னு இல்ல எவ்ளோ நாளைக்குத்தான் நாம அவளுக்கு துணையா இருக்க முடியும் சித்தார்த்துக்கும் ஒரு ஏக்கம் இருக்கும் இல்லையா அதான் அவனுக்கு இன்னும் நல்லா விவரம் தெரியறதுக்கு முன்னாடி அரசியோட மனச மாத்தி அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு யோசிக்கிறேன்..." என்க.

"ரொம்ப சந்தோஷம்ங்க அவ ஒத்துப்பாளான்னு யோசிங்க உங்கள கஷ்டப்படுத்தற மாதிரி பின்னாடி ஏதாச்சும் பேசிட போறா அத என்னால தாங்கிக்க முடியாது..." என்க.


அவள் தாடையை நிமிர்த்தி தன்னை காண செய்தவன் "அவ அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டா நீ மட்டும் ஓவர் பொசசிவ் ஆகாம இரு அது போதும்..." என்க.

அவள் அவனை காதலாக பார்த்தாள்.

"ஏய் இப்படி பாக்காதடி ப்ளீஸ் என்னால கன்ட்ரோல் பண்ண முடியாது..."என்க.

"நீங்க இவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தா என்னதான் பன்றதாம்...." என்க.

"போடி வெக்கப்பட வைக்காத என்றவன் பூரணி எல்லாமே ஓகேதான் ஆனா இந்த சரவணன மட்டும் கொஞ்சம் அவாய்ட் பண்ணேன்..." என்க.

"நாம இங்க வந்தப்போ அவன் அம்மாதான் நமக்கு சப்போர்ட்டா இருந்தாங்க மறந்துட்டீங்களா..." என கேட்க.

"இல்லடி நான் எதையும் மறக்கல ஆனா அவன் சரியில்லைன்னு மட்டும் மனசுக்கு படுது..." என்க.

"நீங்க எல்லோர்ட்டையும் நல்லாத்தான் இருக்கீங்க இந்த சரவணன்ட்ட மட்டும்தான் கோபப்படுறீங்க..." என்றாள் அவள்.

"அவன் அரசிய பார்க்கற பார்வையே சரியில்லை..." என்றான் அவன்.

"நீங்கதான் அப்படி சொல்றீங்க ஆனா எனக்கு அப்படி ஒன்னும் தெரியல..." என்க.

"நீ ஒருநாள் அவனப்பத்தி தெரிஞ்சிக்குவ சரி அதெல்லாம் இருக்கட்டும் நான் வேற ஒரு விஷயம் சொல்லனும்..." என்றான் அவன்.

"சொல்லுங்க..." என்றாள் அவள்.

!என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு ஒன்னு வா போன்னு பேசு இல்ல வாங்க போங்கன்னு பேசு இது என்ன அப்பப்ப இப்படி பேசறது..." என அவன் கேட்க.


"அது கோபத்துல வரது..." என்றவள் "சரி என்ன விஷயம் சொல்லுங்க..." என்க.

"அரசியோட புருஷன இன்னைக்கு பார்த்தேன்..." என்க.

அவளோ பதறி அவனிடம் இருந்து விலகி அமர்ந்து அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

தீனாவின் வீடு

"இவன் என்ன போன மச்சான் திரும்பி வந்தான் கணக்கா போனதும் வந்து கதவ சாத்துனவன் தொறக்கவே இல்ல ஏன் உள்ள ஏதசாச்சும் அடக்காக்கறானா..." என்றபடி அஞ்சலி எட்டி எட்டி அவன் அறைக்கதவையே பார்க்க.

அவள் முதுகில் ஒரு கரம் பட்டதும் பதறி திரும்பியவள் பின்னால் நின்ற கணவனை பார்த்து "நீங்களா..." என ஆசுவாசப்பட.

"ஏன் வேற யார நீ எதிர்ப்பார்த்த...?" என கேட்டான் அவன்.

"யாரையும் எதிர்பாக்கல உங்க தம்பி கோபமா போய்ட்டு கதவ சாத்திக்கிட்டவரு சாப்பாடற. நேரம் கூட வரல அதான்..." என கூற.

"அவன் வருவான் நீ வந்து சாப்பாட்ட எடுத்து வை..." என்க.

மேலே ஒரு பார்வையை செலுத்தியவள் தன் கணவனுக்கு உணவு பரிமாற சென்றாள்.




Leave a comment


Comments


Related Post