இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அன்பெனும் தீயா நீ 10 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 29-03-2025

Total Views: 197

அத்தியாயம் 10

அந்த உயர்ந்த கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஒரு அறையில் கண்களை மூடி அமர்ந்து இருந்தான் தீனா.

கையில் வைத்திருந்த ஐபோன் அவன் பிடியில் வாய் இருந்து இருந்தால் அழுது புலம்பி இருக்கும் "என்னை விட்டுவிடுடா...." என ஆனால் பாவம் அதற்குத்தான் வாய் இல்லையே அதனால் அது அமைதியாக அவனின் கையில் அகப்பட்டு துடிக்க அவனது மனமோ நிம்மதி இல்லாது தவித்துக் கொண்டு இருந்தது.

வேலை நேரத்தில் இப்படி ஓய்ந்து அமருபவன் இல்லை தீனா.

ஆனால் அவன் முன்னால் அமர்ந்து இருந்தவன் காட்டிய வீடியோ அவனை இந்த நிலைக்கு தள்ளி இருந்தது.

ஆம் அவன் கொடுத்த வீடியோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கிய அன்புவும் அவளை புன்னகை முகமாக வரவேற்ற மதனும் கண்ணுக்கு தெரிய அவர்கள் இருவரையும் கண்டவனுக்கு அத்தனை ஆத்திரம் இப்போது கையில் கிடைத்தால் வெட்டி போடும் அளவிற்கு கோபம் தலைக்கேறி இருந்தது.

கையில் குழந்தையுடன் கண்டதும் இன்னும் ஆத்திரம் கொழுந்து விட்டு எரிய இப்போதே அவர்களை கொன்று போட்டுவிடும் அளவிற்கு கோபம் இருக்க அதை அடக்க படாதபாடு பட்டவன் தலை சூடாவதை தடுக்க பிரிட்ஜில் இருந்த நீரை எடுத்து அப்படியே தலையில் சரித்துக் கொண்டான்.

எதிரில் இருந்தவன் அதை பார்த்து அதிர்ச்சியாக பார்க்க "பயப்படாதடா நான் கொஞ்சம் டென்ஷனா இருக்கேன்... உன்ன அப்பறம் பாக்கட்டுமா...?" என கேட்க.

"ஷூயர்டா.. நீ ஓவரா மனச போட்டு அலட்டிக்காத... எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்... இவ்ளோ நாள் எங்க இருக்காங்கன்னு தெரியாம இருந்துச்சு... இப்போதான் ஆளே கையில கிடைச்சாச்சு இல்ல பாத்துக்கலாம்...." என்க.

"தேங்க்ஸ்டா மச்சான்..." என்க.

"இதுல என்னடா இருக்கு... நீ என்னோட பிரண்ட் உனக்காக இதக்கூட செய்யலன்னா நான்லாம் என்னடா ப்ரண்ட்... எனக்கு என்னமோ இதுல ஏதோ இருக்க மாதிரி இருக்கு... நீயே யோசிச்சு பாரு எந்த பிரச்சனையும் இல்லாம உன்னவிட்டு பிரிஞ்சு போயிருக்காங்கன்னா அவங்களுக்கு வேற ஏதோ பிரச்சனை இருந்து இருக்கும்னு உனக்கு தோணலையா...?" என கேட்டான் எதிரில் இருந்தவன்.

"ஏன் தோணாம எல்லாம் தோணிச்சுதான் ஆனா நானே அவள இன்னொருத்தன் கூட இருக்கும் போது என் கண்ணால பார்த்தேன்டா என் கண்ணு பொய் சொல்லாது..." என்க.

"நீ பார்த்த விஷயம் ஏன்டா பொய்யா இருக்க கூடாது... அதாவது நீ பார்த்த விஷயம் ஏன் பொய்யா இருக்க கூடாது ஒருவேளை உங்க ரெண்டு பேரையும் பிரிக்க யாராவது இப்படி பண்ணி இருக்கலாம் இல்லையா..?" என கேட்க.

"நீ என்ன சொல்ல வர...?" என அவன் கேட்க.

"தீனா நான் எத்தனையோ கேஸ் பார்த்து இருக்கேன் அந்த அனுபவத்துல சொல்றேன் நீ ஏன் உன் வீட்டு ஆளுங்கள கொஞ்சம் டீப்பா வாட்ச் பண்ணக்கூடாது..." என கேட்க.

"என் குடும்பத்தை ஆளுங்க எனக்கு துரோகம் பண்ண மாட்டாங்கடா..." என தீனா அடித்து கூற.

"இல்ல தீனா உனக்கு உன் மனைவியும் உன் பையனும் திரும்ப வேணும்னு நினைக்குறியா இல்ல வேணாம்னு நினைக்குறியா அவன் உன் பையன்தான் அப்படிங்கிறதுல உனக்கு ஏதாச்சும் சந்தேகம் இருக்கா...?" என கேட்க.

"அரவிந்த் என்ன பேசற... அந்த வீடியோவ பார்த்த இல்ல... என் சின்ன வயசு முகத்தை அப்படியே உறிச்சு வச்சிருக்கான்... யார் என்ன சொன்னாலும் அவன் என் பையன்கிறதுல எனக்கு ஒரு பர்சென்ட் கூட சந்தேகமே இல்ல...."என்க.

"அப்பறம் என்ன உன் மனைவிய இன்னும் விரும்புறியா...?" என அரவிந்த் கேட்க.

இவனிடம் அமைதி மட்டுமே...

"பதில் சொல்லு தீனா... உன் மனசுல உன் மனைவிதான இன்னும் இருக்காங்க.... அதனாலதான நீ அவங்க போய் இத்தன வருஷம் ஆகியும் இன்னும் வேற கல்யாணம் பண்ணிக்காம இருக்க..." என கேட்க.

"அப்படி இல்ல ஒருதடவை ஏமாந்தது போதும் இனி ஏமாற தயாரா இல்ல..." என்க.

"நீ பொய் சொல்றடா என்கிட்டயே உன்னால உன் மனைவிய தவிர வேற யாரையும் உன் பக்கத்துல மனைவியா வச்சிக்க முடியாது உன் மனசால அத ஏத்துக்கவும் முடியாது...." என்க.

தன் மனதை அப்படியே படம் போட்டு காட்டும் தன் நண்பனிடம் பேச வார்த்தைகளே வரவில்லை அவனுக்கு.

"இப்ப என்ன பண்ண சொல்ற..?" என கேட்க.

"எனக்கு நல்லா தெரியும் உன் பொண்டாட்டிக்கு நீன்னா உயிருன்னு.... என் மனசுல படறத சொல்றேன் ஒன்னு அவங்களுக்கு உன் குடும்பத்து ஆட்களால பிரச்சனை இருந்து இருக்கும்... இல்லனா வெளியில ஏதாச்சும் பிரச்சனை இருந்து இருக்கும்.... நீயே நல்லா யோசிச்சு பாரு... சரி நான் ஒரு யோசனை சொல்றேன் இன்னைக்கு நைட் உன் வீட்டு ஆளுங்கக்கிட்ட உன் மனைவிய பார்த்த விஷயத்தை சொல்லு அவங்களோட ரியாக்ஷன் என்னென்னு பாரு அதுக்கு பிறகு நாம முடிவெடுத்துக்கலாம்..." என்க.

"என்ன நடந்தாலும் அரவிந்த், என் பையன் எனக்கு வேணும்...." என்க.

"பையனோட அம்மா...?" என்ற அவனின் கேள்விக்கு இவனிடம் பதில் இல்லை.

"முதல்ல இன்னைக்கு நான் சொன்னத செஞ்சு பாரு அப்பறம் பேசிக்கலாம்..." என்க 

"சரி..." என்றான் இவன்.

"சரி எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன் நீ நாளைக்கு போன் பண்ணு மேற்கொண்டு ஆகறத பத்தி பேசிக்கலாம்..." என்க.

"ம்ம்ம்ம் சரி..." என்றவன் அரவிந்தை அனுப்பிவிட்டு அந்த வீடியோவை பார்த்தான்.

அவன் கண்கள் தன் மகனை தாண்டி அவளது முகத்தில்தான் நிலைத்து இருந்தது. 

அவளை காணும்வரை கோபமாக இருந்தவன் கண்டபின் அந்த கோபம் எல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை.

ஆனாலும் அன்று அவன் கண்ணால் கண்ட காட்சி எப்படி பொய்யாகும் ஒருவேளை அரவிந்த் சொன்னமாதிரி நான் இந்த பிரச்சனைய வேறு கோணத்துல பாக்கலையோ என எண்ண ஆரம்பித்து இருந்தான்.


நேற்று பேருந்து நிறுத்தத்தில் அவர்களை பார்த்தவனுக்கு மனது ஒரு நிலையில் இல்லை

வீட்டிற்கு சென்றவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்து இருக்க நேற்று அவளை பார்த்து வந்ததில் இருந்து ஏதோ மனதை உறுத்தியது.

சற்றுநேரம் படுத்தவன் அடுத்து அழைத்தது என்னவோ அவனது நீண்ட கால நண்பனான அரவிந்திற்குத்தான்.

போலிஸாக இருக்கும் அவனிடம் தகவல் பகிரப்பட அடுத்து ஒரு மணிநேரத்தில் தீனா எதிர்பார்த்த தகவலோடு நேராகவே வந்துவிட்டான் கையில் சிசிடிவி புட்டேஜோடு அதை பார்த்தவனுக்கு சந்தேகமே இல்லாமல் மதனின் கையில் இருக்கும் குழந்தை தன்னுடைய ரத்தம் என்பது புரிந்து போனது.

அதுவும் அவன் நெற்றியின்  இடப்புருவத்தில்  இருக்கும் சற்று பெரிய மச்சம் அவனின் மஞ்சள் நிறத்திற்கு சற்று கூடுதல் அழகோடு தெரிய தீனாவிற்கு ஒரு துளியும் சந்தேகம் உதிக்கவே இல்லை அவன் தனது ரத்தம் என்பதில்
அதை திரும்ப திரும்ப பார்த்தவனிடம்தான் அரவிந்த் மேற்சொன்னவற்றை பேசியது.

தன் குடும்பத்தின் மீது அலாதி அன்பு வைத்திருக்கும் தீனாவிற்கு அரவிந்த் பேசிச்சென்றது குளத்தில் இட்ட கல்லாய் கலக்கத்தை கொடுத்து இருக்க இன்று இதைப்பற்றி வீட்டில் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவன் கை தானாக தன் போனில் இருந்த மனைவியின் புகைப்படத்தில் இருந்த கன்னதை வருடியது.

இங்கு மதன் வீட்டிலோ "இன்னும் எத்தனை நேரம்தான்டி ஆகும் நீ கிளம்ப..?" என மதன் கேட்டுக் கொண்டு இருக்க.

"இதோ வந்துட்டேன்..." என அவன் முன்னால் வந்து நின்றாள் பூரணி.

அவளை உள்ளுக்குள் ரசித்தாலும் "உன்னலாம் திருத்த முடியாது போய் வண்டியில உக்காரு..." என்க.

"நான் போறேன் உன் ஆசை தங்கச்சிய இன்னும் காணும் பாரு போய் வர சொல்லு..." என்க.

"அவ வருவா நீ வாய மூடு..." என்றவன் "அன்பு..."என அழைக்க "இதோ வந்துட்டோம் மதன்..." என்றபடி வந்தாள் அன்பு.

 "சித்து நீ அத்தைக்கிட்ட வாடா..." என அவனை அணைத்தவள் "வா நாம போலாம்..." என பூரணி அவனை அழைத்து கொண்டு போக.

மதனோ "சித்துவோட ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக்கிட்டியா...?" என கேட்க.

"ம்ம்ம்ம்... எடுத்துக்கிட்டேன் பெருசா ஒன்னும் இருக்காது இல்ல..." என கேட்க.

"நீ பயப்படாத எதும் இருக்காது நேரமாச்சு இப்போ கிளம்பினாதான் அவங்க சொன்ன டைமுக்குள்ள போக முடியும்..."என்க.

"ம்ம்ம்ம்..." என்றவள் அவனுடன் இணைந்து நடந்தாள்.

அவர்களுடைய பயணம் கோயமுத்தூர் செல்ல இருக்க.

இங்கு தீனாவும் கம்பெனி விஷயமாக கோயம்புத்தூர் கிளம்பி இருந்தான்.

நெடுநாள் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் நடப்பது என்னவோ.......!!!!!????


Leave a comment


Comments


Related Post