Total Views: 215
அத்தியாயம் 11
இரவு உணவிற்கு தீனாவின் குடும்பம் தயாராக அமர்ந்து இருக்க அப்போதுதான் வந்தான் தீனா.
"தீனா... வந்துட்டியாப்பா... போய் ப்ரெஷாகிட்டு வா... சாப்பிடலாம்..." என அவன் அன்னை அத்தனை அன்பாக அழைக்க.
கடுகளவும் அந்த அன்பை சந்தேகப்பட முடியவில்லை அவனால்.
அஞ்சலி கூட குழந்தைக்கு உணவு ஊட்டியபடி இருந்தவள் "ஏன் தம்பி டையர்டா தெரியறீங்க சீக்கரம் வந்து சாப்டுங்க... என அழைக்க.
"ம்ம்ம்ம்... அண்ணி... என்றவன் அவளையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவில்லை.
ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ உறுத்த தொடங்கியது அரவிந்த் கூறியதில் இருந்து.
ஆனாலும் இன்று இதற்கு ஒரு முடிவு தெரிந்துவிடும் என யோசித்தவன் வேகமாக குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர "சித்தப்பா..." என்றபடி ஓடி வந்து மடியில் அமர்ந்தான் சந்தானத்தின் மகன் சந்தானம் அஞ்சலியின் மகன்.
"வாங்க செல்லம் சாப்டீங்களா...?" என சப்பாத்தியை பிய்த்து சென்னாகிரேவியில் தொட்டு அவனுக்கு ஊட்ட "அவன் சாப்ட்டான் தம்பி நீங்க சாப்பிடுங்க..."என்றாள் அஞ்சலி.
"அதனால என்ன அண்ணி..." என்றவன் மீண்டும் அவனுக்கு ஊட்ட சந்தானமோ "ஏன்டா களைச்சு போய் வந்துருக்க நீ முதல்ல சாப்பிடு..."என்றான்.
"ம்ம்ம்ம்..."என்றவன் அவனும் உண்டு அண்ணன் மகனுக்கும் ஊட்டினான்.
இடையில் அண்ணனின் மகளும் வர அவளுக்கும் ஊட்டிவிட்டவன் கைக்கழுவிவிட்டு வந்து அமர சந்தானமோ "நாளைக்கு கோயம்புத்தூர் நீ போறியா இல்லை நான் போகட்டுமாடா...?" என கேட்க.
"நானே போறேண்ணா எனக்கு அங்க கொஞ்சம் வேலை இருக்கு... என்றவன் சற்றுமுன் அரவிந்த் பேசியது நினைவில் வந்தது.
"ம்ம்ம் பார்ட்டி என்ன சொன்னாலும் நீ உடனே ஓகே சொல்லிடாத தீனா எதுக்கும் எனக்கு அப்பப்போ கால்பண்ணி தகவல் சொல்லிட்டே இரு..." என்க.
"ம்ம்ம்ம்..." என்றான் அவன்.
அவன் முகத்தை பார்த்தவன் "என்னடா ஏன் ஒரு மாதிரி இருக்க உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா நீ வேணா ரெஸ்ட் எடு..." என்க.
"ஆமாப்பா நீயும் ராப்பகலா தூங்காம உழைக்கிற அப்படி யாருக்குத்தான் உழைக்கிற நம்மகிட்ட இல்லாத பணமா ஏன் இப்படி ஓடிட்டே இருக்க...." என அவன் தாய் கேட்க.
"ஏம்மா நான் யாருக்காக உழைக்கனும் கேக்குறீங்க... என் பையனுக்காக உழைக்கிறேன்னு வச்சிக்கோங்களேன்..." என்க.
அஞ்சலி முதற்கொண்டு டிவியில் இவர்களது உரையாடலை கேட்டபடி இருந்த அவனது தந்தைக்கும் அதிர்ச்சியாக இருக்க
"நீ என்னப்பா சொல்ற...?" என கேட்க.
"ஏம்மா உங்களுக்கு காது நல்லாத்தான கேட்குது என் பையனுக்காகன்னு சொன்னேன்..." என்க.
"ஓ அர்னவ சொல்றியா நீ..."என அஞ்சலி கேட்க.
அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் "இல்லண்ணி அர்னவும் என்னோட பையன்தான் ஆனாலும் என் ரத்தத்தில உருவானவன பார்த்தேன்..." என்க.
அவன் கூறியது முதலில் யாருக்கும் புரியவில்லை.
"தீனா என்னடா என்னென்னமோ பேசிட்டு இருக்க..." என அவன் அண்ணன் கேட்க.
"ஏன் இப்படி எல்லோருமே அதிர்ச்சியாகுறீங்க எனக்குன்னு குடும்பம் குழந்தைன்னு எதும் இருக்க கூடாதா..?" என கேட்க.
"டேய் என்ன உளறிட்டு இருக்க நாங்க அப்படியா நினைப்போம் நீ நல்லா இருந்தாதான எங்களுக்கும் சந்தோஷம்... என்றான் அவன் அண்ணன்.
"நான் சொன்னது என்னோட பையன்... எனக்கும் அன்புவுக்கும் பிறந்த பையன்..." என்க.
குழந்தைகள் தவிர மற்ற நான்கு பேருக்கும் பூமி தலைகீழாக சுற்றியது.
"நீ... நீ...என்னப்பா சொல்ற அந்த ஓடுகாலிக்கு பையனா... அது... அது... உன் பையனா இருக்க சான்ஸே இ... இருக்காது..." என அவன் அன்னை கூற.
இதில் அதிகம் தடுமாற்றமடைந்தது சந்தானமும் அஞ்சலியும்தான்.
தொல்லை ஒழிந்தது என்று அல்லவா நினைத்து இருந்தார்கள் புதிதாக தீனா கூறிய அவளது பெயரைக்கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சந்தானம்தான் சற்று தெளிந்து "தீனா என்ன சொல்ற அந்த பொண்ண எங்க பார்த்த நீ அந்த பொண்ணு இறந்து இருக்கும்னு நினைச்சோம்..." என்க.
"அவள பார்த்தேன் இன்னைக்கு காலையில கையில ஒரு நாலு வயசு பையனோட..." என்க.
"இருக்காது அவளுக்கும் உனக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பே இருக்காது..." என அவன் அன்னை அடித்து கூற அவனோ அவன் தாயை முதன் முறையாக சந்தேகக் கண்ணோடு பார்த்தான்.
அவன் அன்னையின் பேச்சில் அவன் பார்வை கூர்மையாக தன் மீது படிவதை உணர்ந்தவர் "அது வந்துப்பா..." என ஏதோ கூற வர "ஏம்மா உங்க பையனால ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாதுன்னு நினைக்குறீங்களா..?" என கேட்க.
"ஐயோ... சிவசிவா...என்னடா பேச்சு இது... நான் போய் அப்படி நினைப்பேனாடா நீ சிங்கக்குட்டிடா அவளுக்கும் உனக்கும் பிறந்த குழந்தைன்னு சொல்றியே அதான் என்னால ஏத்துக்க முடியல அந்த ஓடுகாலிக்கு குழந்தை பிறக்கவே பிறக்காதுன்னு டாக்டர் உன்கிட்டதான சொன்னாங்க அதான் கேட்டேன்..." என்க.
"இன்னைக்கு காலையில கிளைன்ட் ஒருத்தர பிக்கப் பன்றதுக்காக நான் போயிருந்தேன் அங்கதான் அவள பார்த்தேன் ஒரு நாலு வயசு பையனோட இந்த மச்சம் எனக்கு எப்போல இருந்து இருக்கும்மா..." என கேட்க.
"நீ பிறக்கும்போதே அப்படிதான் இருந்துச்சு..." என்றார் அவர்.
"ம்ம்ம்ம்.. அவனுக்கும் அதே மாதிரி ஒரு மச்சம் இருக்கு அதும் இல்லாம என்னோட சின்னவயசு மூஞ்ச அப்படியே உறிச்சு வச்சுருக்கான் இதோ..." என அவன் போனில் இருந்த வீடியோவை காட்ட மொத்த குடும்பமும் அதிர்ந்துதான் போனது.
இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் என்பது அவர்களது முகபாவனையில் தெரிய ஒவ்வொருவரின் முகத்தையும் குறித்து கொண்டவன் எனக்கு என் பையன் வேணும் என்ற அடுத்த குண்டை தூக்கி போட.
இதயம் வெடிக்காத குறைதான் இதில் சந்தானம்தான் அதிகம் பாதிக்கப்பட்டது பின்னே அவனது ஆசைக்கு இணங்காத அவளுக்கு வேசிப்பட்டம் கட்டி இந்த வீட்டை விட்டும் தன் சொந்த தம்பியின் வாழ்க்கையைவிட்டும் விரட்டி அடிக்க முக்கிய காரணமாக இருந்ததே அவன்தானே அவளை இங்கிருந்து அனுப்பிவிட்டால் தம்பியிடம் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் சொத்துக்கு சொத்தும் ஆயிற்று அஞ்சலியின் தங்கையை கட்டி வைத்துவிட்டால் எப்படியும் நாங்கள் கூறியபடிதான் அவள் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் அவனை இத்தனை நாட்களாக தேற்றி இருக்க திடீரென அவன் இப்படி தலையில் குண்டை தூக்கிப்போடுவான் என அவன் எதிர்பார்க்கவில்லை.
அரவிந்த் கூறியது போல நான் இல்லாத நேரமாக இங்கு ஏதோ நடந்து இருக்கிறது.
நான்குபேரின் பார்வையும் சரியில்லை என எண்ணியவன் "சரிம்மா எனக்கு டையர்டா இருக்கு நான் போய் தூங்கறேன்... இதப்பத்தி நாம இன்னொரு நாள் பேசுவோம்..." என்றவன் யார் பதிலையும் எதிர்பாராது மாடியேறிவிட்டான்.
செல்லும் அவனையே பார்த்து இருந்தவர்களுக்கு உள்ளுக்குள் கிலி பிடிக்க ஆரம்பித்தது அவள் வந்தால் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் குட்டும் வெளிப்பட்டுவிடுமே நடந்தது அனைத்தும் தெரிந்தால் அவன் இந்த வீட்டில் ஒரு நிமிடம்கூட தங்கவிட மாட்டான் என ஆளுக்கொரு எண்ணத்தில் இருக்க
அவசரம் அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தான் தீனா...
காலையிலேயே அவனது போன் அடிக்க எடுத்து பார்த்தவன் "சொல்லு அரவிந்த்..." என்க.
"இன்னைக்கு யாரையோ பார்க்க போகனும்னு சொன்னியே..?"என கேட்க.
"ஆமாடா கோயம்புத்தூர் வரைக்கும் போறேன் சூரத்ல இருந்து ஒரு க்ளையன்ட் வராரு அவரோட சொந்த ஊரு கோயமுத்தூர்தானாம் அங்கயே வர சொல்லி இருக்காரு இந்த ஒப்பந்தம் ஓகே ஆச்சுன்னா நம்ம கம்பெனி க்ளாத் இன்னும் அடுத்த ஸ்டேஜுக்கு போய்டும் சரி சொல்லு காரணம் இல்லாம நீ போன் பண்ண மாட்டியே..." என இவன் கேட்க.
"ம்ம்ம்ம் காரணமாத்தான் போன் பண்ணேன் உன் பையன பார்த்தேன்..." என்க.
இவன் உடலுக்குள் மெல்லிய அதிர்வு.
"பார்த்தியா..?" என கேட்க.
"ம்ம்ம்.. ஆமாடா எம்பி வராரு இல்ல அதனால பந்தோபஸ்து வேலையா இருக்கும்போது ஒவ்வொரு வண்டியா செக் பண்ணிட்டு இருந்தோம் அப்போ மதன் அவன் மனைவி உன்னோட மனைவி கையில் பையன்னு நாலுபேரும் இருந்தாங்க டீடெயில்ஸ் கேட்டப்போ பையனுக்கு ஹெல்த் இஷ்யூ இருக்கு அதனால கோயமுத்தூர்ல இருக்க ஒரு டாக்டர் போறதா சொல்லி இருக்காங்க..."என்க.
"நானும் இப்பவே கிளம்பறேன்டா..." என்றவன் அடுத்து துரிதமாக கிளம்பி சென்றிருக்க வீட்டில் உள்ளவர்கள்தான் அவன் இரவு பேசிய பேச்சில் அதிர்ந்து அடுத்து என்ன செய்வது என தெரியாது உறைந்து இருந்தனர்.
எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்குமோ?????