இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அன்பெனும் தீயா நீ 12 அனைத்து பாகங்கள் படிக்க
By Sathya kumar "கவிவருணி" Published on 06-04-2025

Total Views: 321

அத்தியாயம் 12

கிட்டத்தட்ட நான்கரைமணி நேர பயணம் மனம் ஒருநிலையில்லாது தவித்துக் கொண்டு இருக்க இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி இருந்தான் தீனா.

நேற்று இரவு தான் அன்புவை பற்றி பேசியதும் வீட்டில் உள்ள பெண்களின் முகம் போன போக்கை வைத்து தான் இல்லாத நேரம் வீட்டில் ஏதோ நடந்து இருக்கிறது வீட்டில் உள்ளவர்களின் மேல் இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையினால் வீட்டில் நடப்பவற்றை சரியாக கவனிக்கவில்லை அதும் இன்றி அன்பு ஒருநாளும் யாரைப் பற்றியும் எந்த குறையும் கூறியது கிடையாது ஒருவேளை என்னிடம் கூறினால் நான் நம்ப மாட்டேன் என எண்ணி என்னிடம் சொல்லாது விட்டுருப்பாளோ கடைசியாக நான் எந்த தப்பும் பண்ணல மாமா நம்புங்கன்னு எவ்ளோ அழுது துடித்தாள் என் அன்னை அவளை நடத்தை கெட்டவள் என அவள் தலைமுடியை பிடித்து வெளியேற்றிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக அல்லவா நின்றிருந்தேன் ஆனால் ஏதோ நடந்து இருக்கிறது என்பது இரவு வீட்டு பெண்களின் இருண்ட முகத்தை பார்த்ததும் தெரிந்துவிட்டது அல்லவா என அவன் ஏதேதோ எண்ணியபடி இருந்தான்.

இன்னும் அவனுக்கு தன் உடன்பிறந்தவன்தான் தன் காதல் மனைவி தன்னைவிட்டு பிரிய முக்கிய காரணம் என தெரியவில்லை தெரிந்தால் என்ன செய்வானோ

அவன் சிந்தனையை கலைத்தது அவன் அலைப்பேசி.

"சொல்லு அரவிந்த்..." என்க.

"சாரிடா என்னால இப்ப உனக்கு உதவி பண்ண முடியாது எம்பி பக்கமா வந்துட்டதா தகவல் வந்துருக்கு ஏற்கனவே அவரு வேற என் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு கம்பளைண்ட் கொடுத்து இருக்காரு இதுல என்னால இங்க அங்கன்னு அசைய முடியல நான் எப்படியாச்சும் எந்த ஹாஸ்பிடல்னு விசாரிக்க சொல்றேன்..."என்க.

"விடுடா பார்த்துக்கலாம்..." என்றான் இவன்.

"வருத்தப்படாத எல்லாம் சரியாகும் நீயும் உன் மனைவியும் பழைய படி சந்தோஷமா வாழ்வீங்க..." என்க.

"எனக்கு என்னமோ மனசு உறுத்தலா இருக்கு அரவிந்த்..." என்க.

"ஏன்டா..."  என அவன் கேட்க.

"நீ சொன்ன மாதிரியே நேத்து நைட் என் வீட்டுல இதப்பத்தி பேசினேன் எல்லோருமே அதிர்ச்சியாகிட்டாங்க யாருடைய முகத்துலயும் சந்தோஷமே இல்ல ஒரு பையன் இருக்கான் என்ன மாதிரியே இருக்கான்னு சொல்லியும் அதுக்கு வாய்ப்பே இல்லன்னு அடிச்சு பேசினாங்களே தவிர சந்தோஷப்பட்ட மாதிரி தெரியல..." என்க.

"ம்ம்ம்ம்... நான் இந்த வொர்க்க முடிச்சிட்டு வரேன் அதேமாதிரி நீயும் இப்ப உடனடியா முடிக்க வேண்டிய வேலை இருந்தா சீக்கிரமா முடி நமக்கு தெரியாம இன்னும் நிறைய இருக்கும் போல..." என்க.

"ம்ம்ம்ம்டா நீ உன் வொர்க்க பாரு இந்த மீட்டிங்க முடிச்சிட்டு வரேன் அப்பறம் இதப்பத்தி என்னென்னு விசாரிக்கலாம்..." என்க.

"ம்ம்ம்ம் டேக்கேர்..."என்க.

தன் இதயத்தை தடவிக் கொண்டவன் "எனக்கு என்னமோ என் ஆழ்மனம் சொல்லுது என் பையன நான் கண்டிப்பா பார்ப்பேன்னு..." என நெஞ்சை நீவியபடி மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

இங்கு கோயமுத்தூர் வந்து சேர்ந்திருந்தனர் மதனும் பூரணியும் அன்புவும்.

அன்புதான் "ஏன் பூரணி டயர்ட்டா இருக்கா...?" என கேக்க.

"இல்ல அன்பு...."  என்றாள் அவள். 

"நீ இல்லன்னு சொன்னாலும் உன் முகத்தை பார்த்தாவே தெரியாதா நீ எதுக்கு அலைஞ்சிட்டு உடம்புக்கு சிரமம்தான சொன்னா எங்க கேக்கற இப்ப பாரு எவ்ளோ ஓய்ஞ்சு தெரியறன்னு..." என அவள் கூற.

"நல்லா சொல்லு நாம சொல்றத என்னைக்கு காதுல வாங்கறா..." என அவன் ஆரம்பிக்க.

"போதும் நிறுத்துங்க நீங்க டாக்டர பார்த்துட்டு வந்து என்ன பிரச்சனைன்னு சொல்ற வரைக்கும் நான் என்னமோ ஏதோன்னு பயத்துலயே உக்காந்து இருக்கனும் அதுக்கு இது எவ்ளோ பரவால்ல சித்துக்காக நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் உள்ள இருக்கறது சித்துவோட பாப்பா சோ அவ அவனுக்காக பொறுத்துப்பா..." என்க.

"அடிப்பாவி நீ முடிவே பண்ணிட்டியா...?" என அவள் கேட்க.

"ஏய் என்ன நீ சந்தேகமா கேக்கற நான் உறுதியா சொல்றேன் உள்ள இருக்கறது பாப்பாதான் அதும் சித்துவோட பாப்பா..."என்க.

"உன்ன என்னதான்டி பன்றது அது வளர்ந்து வரதுக்கு முன்னாடியே அது அவனோட பாப்பான்னு சொல்ற..." என கேட்க.

"நீங்க வேணா பாருங்க இது பாப்பாதான்..." என்க.

"ஐயோ போதும் விடுங்க உங்க சண்டையை அப்பறமா வச்சிக்கோங்க டேய் சித்து நீ வா..." என அன்பு அழைக்க.

"நான் அத்தைகூடவே இருக்கேன்ம்மா..." என்க.

"இவன் அவளுக்கு மேல இருப்பா போல மதன் நீ சொல்லு டாக்டர எப்போ பாக்கனும்..." என கேட்க.

"பதினொன்னுக்கு நாம உள்ள இருக்கனும் அரசி..." என்க.

"ஏன் எப்பவும் போற ஓட்டல் விட்டுட்டு வேற ஓட்டல் புக் பண்ணியிருக்க..." என அவள் கேட்க.

"இங்க நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன் என்றவன் அதும் இல்லாம ஹாஸ்பிடலுக்கு இது ரொம்ப பக்கமா இருக்கு அதான்...என இழுத்தவனுக்குத்தான் தெரியுமே  வரும்வழியில் அவன்தான் தீனாவை பார்த்தானே அதன்பிறகு தான் எப்போதும் தங்கும் ஓட்டலை விடுத்து வேறு ஓட்டலில் அறை எடுத்து இருந்தான்.

இத்தன சம்பாஷணைகளும் ஹோட்டல் வாயிலேயே நடக்க.

உள்ளே வந்து செக் இன் செய்தவர்கள் அங்கு இருந்த மீன் தொட்டியை வேடிக்கை பார்த்தபடி ஏதோ பேசிக் கொண்டு இருந்த இருவரையும் பார்த்த அன்பு "ஏன் மதன் எனக்கு ஒரு சந்தேகம்...?" என கேட்க.

"என்ன..?" என கேட்டான் அவனும்.

"இல்ல இந்த பூரணிய எப்படி லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்ட..?" என கேட்க.

"ஏன் உனக்கு இந்த சந்தேகம்..?" என அவன் கேட்டான்.

"இல்ல இவ வளர்ந்த மாதிரியே தெரியல..?" என கேட்க.

"ஏய் அவ காதுல விழுந்துட போகுது அப்பறம் உன்னையும் என்னையும் பிரிக்க பாக்கறா உன் தங்கச்சின்னு எங்கிட்ட கம்ப்ளைன்ட்க்கு வருவா..." என்க.

"ஆனா நீ ரொம்ப பாவம் அவள எப்படித்தான் இத்தன நாள் சமாளிச்சியோ..." என கேட்க.

அவளை காதலாக பார்த்தான்.

"அவ பருவ வயசுல இருக்க குழந்தை அன்பு அத்தனை அன்பானவ..." என்க.

"ம்ம்ம்ம் போதும் போதும் வழியுது துடைச்சிட்டு வா எவ்ளோ நேரம் இங்கயே நின்னுட்டு இருப்ப..." என அவனை இழுத்துக் கொண்டு சென்றவள் "ஏய் பூரணி..." என அழைக்க.

திரும்பி பார்த்தவள் "என்ன...?" என கேட்க.

"நேரமாச்சு வாங்க ஹாஸ்பிடல் போகனும்..." என்க.

"நீங்க போங்க நாங்க வரோம்..." என்றவள் அங்கிருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் இருவரும் ஏதோ கதை பேசியபடி இருக்க
இருவரையும் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு இருவரும் சென்றனர்.

உள்ளே சென்றவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு உணவு உண்ணலாம் என வர அப்போதும் இருவரும் வந்திருக்கவில்லை.

"மதன்..." என அவள் அழைக்க சொல்லு அன்பு என என்றபடி பாத்ரூமினுள் இருந்து  வெளியே வர "இதுங்க தொல்லை தாங்கல இன்னும் வரல பாரு நான் போய் பார்த்து கூட்டிட்டு வரேன்..." என்றபடி போனவளும் நீண்ட நேரமாக வராது இருக்க "எங்க போனாங்க  இவங்க..." என தேடியபடி மதனும் கீழே வர அங்கு பார்த்த காட்சியில் அவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

அன்புவும் தீனாவும் எதிரெதிராக நிற்க அவர்களுக்கு இடையில் நின்ற சித்துவும் இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தான்.




Leave a comment


Comments 1

  • R Rukmani
  • 3 weeks ago

    Hi I am new to this wonderful site.Thanks for accepting me a member. The story is very very interesting from the beginning


    Related Post