தாரிகா செந்தூரனின் கண்களை ஆழ்ந்து பார்த்தாள். விளையாடுகிறானா? அப்படி எல்லாம் அவளிடம் விளையாடுபவன் இல்லையே? எப்போதும் பொறுப்பான மாமனாகத் தானே நடந்துக் கொள்வான்? “அப்படி பயப்படுறவரு என்னை நம்பி உன்னை என்னோடு அனுப்பலாமா சொல்லு?” என்று சிரித்தவன் நொடியில் சிரிப்பை நிறுத்தியிருந்தான்.
அவன் கண்களில் குரோதம் வலி மட்டுமே தெரிந்தது, ஏதோ அவன் திட்டம் போடுகிறானோ என்று தோன்ற. “மாமா எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு, என்னால வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாது. அங்கே மண்டபத்தில் எல்லாரும் காத்திட்டு இருப்பாங்க. அப்பாவுக்கு எத்தனை தலைகுனிவாக போயிடும்? முதலில் மண்டபத்திற்கு போங்க” என்று சற்று அதட்டலாக சொன்னாள்.
“என்னடி பொல்லாத காரணம், நீ அந்த சித்தார்த்தை காதலிச்ச காரணம் தானே அது? எவ்வளவு வருஷமா உனக்கு அவனை தெரியும்?” என்று கேட்டான் கோபமாக
“இரண்டு வருடமாக, நான் கல்லூரி சேர்ந்த போது மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்” என்றாள் தலையை குனிந்தபடி
“நீ பொறந்ததுல இருந்து உனக்காக இருபத்திரண்டு வருஷமாக காத்திட்டு இருக்கேன். இரண்டு வருஷத்திற்கு முன்னாடி எவனோ வந்து என் வாழ்க்கையில் குறுக்கிட்டா அவனுக்கு உன்னை தூக்கி கொடுத்திட்டு போக நான் என்ன இளிச்சவாயனா?” என்றான் குரூரமாக அவளை முறைத்து.
அவனின் இந்த முகம் அவளுக்கு புதிது, அவனை பார்க்கவே இப்போது பயமாக இருந்தது. எச்சிலை விழுங்கி கொண்டு, “என்னோட விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க மாட்டியா மாமா?” என்றாள் மெல்லிய குரலில்.
வேகமாக இல்லை என்று தலையை இடவலமாக ஆட்டினான். அப்போது கவின் செந்தூரனை போனில் அழைத்தான். “டேய் மச்சான், எங்கடா போய்ட்ட? இந்த பொண்ணு வேற ரிசப்ஷனுக்கு நேரம் ஆகுதுனு சொல்லிட்டே இருக்கு” என்றான் கவின்.
செந்தூரன் தாராவை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, “கவின் ஒரு டாக்சி புடிச்சு அந்த பெண்ணை மண்டபத்தின் வாசலில் விட்டுட்டு, அப்படியே நீ உன்னோட சொந்த ஊருக்கு போயிடு. நான் ஒரு மாதம் கழித்து உன்னை கூப்பிடுறேன்” என்றான்.
“என்னடா சொல்றே? நீ கல்யாணத்துக்கு வரலையா? தாரா எங்கே?” என்றான் கவின் குழப்பமாக.
“ஏய் நீ… நீ சொல்றதை பார்த்தால் தாராவை கடத்திட்டு போறீயா?” என்றான் கவின் நம்பாமாட்டாமல்.
“அதை ஏன்டா கடத்திட்டு போறதா சொல்றே? கல்யாணம் பிடிக்காததால் மண்டபத்திற்கு போகாமல் என்னோட ஓடி வந்துட்டதாக கூட சொல்லலாம் இல்லை” என்றான் தாரிகாவை ஏளனமாக பார்த்து.
“டேய் நீ செய்யறது எதுவும் சரியில்லை, முதலில் மண்டபத்திற்கு வா” என்ற கவினின் காலை அப்போதே கட் செய்து ஸ்விட்ச் ஆப் செய்தான்.
“மாமா நீ எவ்வளவு நல்லவன்? என் மாமா இப்படி எல்லாம் செய்யமாட்டாய் தானே? சும்மா தானே என்கிட்ட விளையாடறே?” என்றாள் தாரா பயத்தை மறைத்து லேசாக சிரித்தபடி.
அவளை நக்கலாக பார்த்து விட்டு கலகலவென்று சிரித்தான். அதன்பிறகு எதுவும் பேசவில்லை. வண்டியை அதி வேகமாக செலுத்திக் கொண்டிருந்தான். முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. இனி அவனிடம் பேசினாலும் பயன் இல்லை என்று அமைதியாக அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தாரிகா.
சிறிது நேரம் கழித்து, “மாமா பசிக்குது” என்றாள் பாவமாக. திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு, “இன்றைக்கு ஒரு இரவு சாப்பிடலைனா செத்துவிட மாட்டே, இந்தா இப்போதைக்கு தண்ணியை மட்டும் குடி. எங்கேயும் வண்டி நிற்காது” என்று சொல்லிவிட்டு அவளிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்தான்.
வேறுவழியில்லை என்பதால் அவனிடம் தண்ணீரை மட்டும் வாங்கி குடித்துவிட்டு “அட்லீஸ்ட் கொஞ்சம் மெதுவாச்சும் போ, தலை சுத்துது” என்றாள் தலையை இருகைகளாலும் பிடித்துக் கொண்டு. “அப்படியே இருக்கையில் சாய்ந்து தூங்கு, எதுவும் தெரியாது” என்று சொன்னான்.
அவனிடம் எதுவும் பேசிப் பயனில்லை என்று தெள்ள தெளிவாக புரிந்து விட அமைதியாக இருக்கையில் சாய்ந்து கண் மூடினாள். அப்படியே கண் அயர்ந்தும் போனாள்.
அவளை புருவம் சுருக்கி பார்த்தான் செந்தூரன், எப்படியும் அழுது ஆர்பாட்டம் செய்வாள், குறைந்தது அவன் சட்டையையாவது பிடித்து உலுக்குவாள், காதலனை பிரிய நேர்வதை நினைத்து புலம்புவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவளானாள் தூங்கி கொண்டிருக்கிறாள்.
ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்துவிட்டு, பின்பு காரை வேகமாக செலுத்தினான். கார் பாண்டிச்சேரியிலிருந்த ஒரு ரிசார்டை வந்து அடைந்திருந்தது. அவளை எழுப்பினான், அவள் எழுவதாக தெரியவில்லை.
அவளை அப்படியே தூக்கிக் கொண்டு அவர்களுக்காக புக் செய்திருந்த குடில் போன்றிருந்த ரிசார்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த அறைக்குள் அவளை படுக்க வைத்தான். காரை பார்க் செய்து விட்டு, குடிப்பதற்காக பாலை மட்டும் ஆர்டர் செய்தான். அவளை எழுப்பி பாலை பருக சொன்னான். ஆனால் அவளோ எழுந்திருக்கவில்லை. காரின் வேகத்தில் அவளுக்கு மயக்கம் போலும் என்று நினைத்தவன் அவளை ஆழ்ந்து நோக்கினான்.
அவளின் மாசுமருவற்ற முகத்தில் இன்னமும் குழந்தை தனம் மீதமிருந்தது. அவளின் மெலிந்த தேகமும், கொடி போன்ற இடையும், அழகிய முகமும், அதில் பளிரென்று தெரிந்த சிவந்த உதடுகளும் என அனைத்துமே அவனை பித்தம் கொள்ளச் செய்தது. ஐந்து வருடமாக அவளை காணாமல் ஏங்கிக் கொண்டு இருந்தவனாயிற்றே. இப்போது ஒரே அறையில் அவளுடன் இருக்கும் இந்த தருணத்தை ரசித்தபடி தூங்காமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
தாரிகா கண்விழிக்கும் போது அவன் சோபாவில் அமர்ந்தபடி கண் அயர்ந்திருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தாள், கதவை தாளிட்டு இருந்தான், திறக்க முடியவில்லை. அவனின் அலைபேசியை எடுத்து வீட்டிற்கு தகவல் கொடுக்க எண்ணினாள். ஆனால் அதன் பாஸ்வேர்ட் தெரியாமல் திறக்கவும் முடியவில்லை. தொடர்ந்து வேறு வேறு எண்களை போட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏன் அவ்வளவு கஷ்டபடறே தாரிகா, இன்டர்காமில் ரிசப்ஷனுக்கு போன் செய்து உங்க அப்பாவிற்கு அழைக்கலாமே?” என்றான் செந்தூரன் கைகளை தலைக்கு முட்டு கொடுத்துக் கொண்டு, ஓரப்பார்வையால் அவளை பார்த்தபடி
“மாமா நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என்னை வீட்டில் கொண்டு போய் விடு” என்றாள் கோபமாக. அவன் பதிலேதும் சொல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்தாள், அவனின் எதிரே இருந்த டீபாயின் மேல் சாவி இருப்பதை பார்த்தவள் ஓடிவந்து அதை எடுக்க முயன்றாள்.
நொடியில் அவளின் முயற்சியை உணர்ந்தவன், அவளிடமிருந்து சாவியை பிடுங்காமல் அவளின் இடையைப் பற்றி தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். அதில் அவள் அப்படியே அவனின் மடியில் விழுந்தாள்.
அவன் பிடியிலிருந்து விலக அவள் திமிற திமிற அவனின் பிடி மேலும் மேலும் இறுகியது. அவள் இடையைச் சுற்றி ஒரு கையால் அழுத்தி பிடித்தவன், தோள்பட்டையையும் மறுகையால் வளைத்து பிடித்தான். அவள் தன் உடலை மொத்தமாக உலுக்கி அவனிடமிருந்து விலகுவதற்கு செய்த முயற்சியெல்லாம் அவளுக்கு தான் பாதகமாக முடிந்தது.
மொத்தமாக அவள் அவனின் மடியிலும் கைவளைவிலும் இருப்பதால் அவள் மேனியை வஞ்சனையின்றி அழுத்தி பிடித்து தடுத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் முன்னேற முடியவில்லை, பெருமூச்சுடன் தொய்ந்து அமர்ந்தாள்.
அவனுக்கும் ஏதோ வித்தியாசமாக இருந்தது, இதுவரையிலும் பெண்மையின் மென்மையை உணராதவனின் மடியில் பூக்குவியலாக அமர்ந்திருந்தவளின் வாசமும் மென்மையும் அவனை கிறங்கடித்தது. மடியிலிருந்தவளை தன் இரு கைகளால் இடையிலும் தோள்பட்டையிலும் அழுத்தம் கொடுத்தான். அந்த அழுத்தம் அவளுக்கு வேறு எதுவோ உணர்த்தியது, அதை அவள் உணரும் போதே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
மெல்ல மெல்ல அவன் கைகள் வேறுவிதமாக அழுத்தத்தைக் கொடுக்க, அவனிடமிருந்து தன்னை காக்கும் பொருட்டு மொத்த வலிமையையும் கொண்டு திமிறினாள். அவளுக்குள் மென்மையை உணர்ந்து கொண்டிருந்ததால் அவன் அதில் சற்றே தடுமாற, அதை பயன்படுத்தி கதவை திறக்க ஓடினாள்.
தன்னிடமிருந்து விலகி ஓடும் அவளை தடுக்க நினைத்து அவள் புடவை முந்தானையை பற்றி இழுத்தான், அவள் ஓடியவேகத்திற்கும், அவன் இழுத்த வேகத்திற்கும் அது மொத்தமாக அவன் கையிலிருந்தது. அவனுக்கும் ஏதோ போல ஆகிவிட்டது. எழுந்து அந்த புடவையை அவளிடம் கொடுக்க எழுந்தான்.
ஆனால் அவளோ அவனை தீப்பார்வை பார்த்தாள், “அடச்சே, உன்னை என்னவோன்னு நினைச்சேன். இவ்வளவு மோசமானவனா நீ? திருமணம் ஆகப்போற என்னை கடத்தி வந்ததும் இல்லாமல், என்கிட்ட தப்பா நடக்க பார்க்கிறயே? என்னை கடத்தி வந்துட்டா எனக்கும் சித்தார்த்துக்கும் நடக்கும் திருமணத்தை உன்னால நிறுத்தி விட முடியுமா? இன்னிக்கு இல்லைனா என்ன? வேறொருநாள் திருமணம் செய்துப்போம்” என்றாள் அவனை தோற்கடித்துவிடும் ஆவேசத்தில்.
மன்னிப்புக் கேட்டு அவளிடம் புடவையை கொடுக்க வந்தவன் அப்படியே நின்றான். இன்னிக்கு இல்லைனா வேறொருநாள் அவனை திருமணம் செய்துக்குவாளாமே? ஆத்திரம் தலைக்கேறியது, கையிலிருந்த புடவையை ஒரு மூலையில் வீசியெறிந்தவன் அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கினான்.
பின்னாலே ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து சென்றவள் இறுதியில் சுவற்றில் மோதி நின்றாள். மொத்தமாக அவள் மேல் சாய்ந்து நின்றான், அப்போது உணர்ச்சி வசத்தால் தன்னை அறியாமல் அவள் மீது கைகளை படர விட்டவன். இப்போது வேண்டுமென்றே செய்தான்.
“இப்போ நீ செய்யறதுக்கு பேர் என்ன தெரியுமா? என்னை… ஒரு பெண்ணை கற்பழிக்க போறீயா? இதுதான் கதிரேசன் மாமாவோட வளர்ப்பா?” என்று அவனை பார்த்து அழுத்தமாக கேட்டாள்.
ஒருகணம் தயங்கியவன், தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டான், என்னவென்று அவள் உணரும் முன் அவள் கழுத்தில் தாலியை கட்டி விட்டிருந்தான். இதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை, விழி விரித்து அவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
அவளை நகைக்கடையில் விட்டவன் அவளுக்கான நகையை தேர்ந்தெடுக்க சொல்லிட்டு அவன் அவளுக்காக தாலியை வாங்க சென்றிருந்தான்.
“இப்போ உரிமையோட தொடலாம் தானே?” என்று ஏளனமாக சிரித்துக் கொண்டு தன் பார்வையை அவள் மேல் வஞ்சனையின்றி படரவிட்டான்.
“நீ என் மாமா செந்தூரனா? இப்படி எல்லாம் உனக்கு செய்ய தெரியுமா?” என்றாள் அதிர்ச்சி மாறாமல்.
“ஏன் எப்பவும் இளிச்சவாயன் போல முட்டாளாகவே இருக்கணுமா? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, எனக்கு வேண்டியதை நான் தானே எடுத்துக்கணும்?
இளமை தொடங்கும் வளர்இளம் பருவத்தில் இருந்த என்னிடம் நீயாக தானே வந்து மேலே விழறதும் என் முதுகு மேல் ஏறுவதுமாக இருந்தே. அப்போதெல்லாம் கட்டுப்பாடோடு இருந்த எனக்கு என்ன கிடைத்தது? துரோகம் தானே? அப்போவெல்லாம் என் மேலே ஆர்வமாக தானேடி இருந்தே?
உங்கப்பன் சொன்னான்னு பிசினஸ்ல பெரியாளாக ஆகறதுக்கு என்னோட ஐந்து வருஷ உழைப்பை போட்டு ஜெயிச்சு வந்து இருக்கேன். இந்த ஐந்து வருஷமும் ஒரு பெண்ணை கூட ஏறெடுத்தும் பார்க்காமல் ஒரு யோகி போல வாழ்ந்திருக்கேன்.
ஆனால் நீ? நான் இல்லாத இந்த இடைவெளியில் ஒருத்தனை பார்த்து லவ் பண்ணியிருக்க? ஆனால் உங்கப்பன் அன்றைக்கே சொன்னான்டி “கண்ணில் படாதது கருத்தில் நிலைக்காது”னு அதுசரியா போச்சு. என் பின்னாடி சுத்திட்டு இருந்தவ, நான் இல்லைனதும் வேறொருத்தனை பார்க்க தயாராயிட்டு இருக்கே? நீயெல்லாம் என்னை பத்தி பேசவே கூடாது?” என்றான் ஏளனமாக.
“ச்சீ, உண்மை என்னன்னு தெரியாமல் கேவலமாக பேசாதே, உன்கிட்ட எனக்கு பிடிச்சிருந்ததே உன்னோட இத்தனை வருட பொறுமை தான். ஆனால் இப்போ உன்னை பேய்தான் பிடிச்சிருக்கு, உன்கிட்ட குரூரம் தான் இருக்கு” என்று சொல்லி நெருங்கி நின்றிருந்த அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.
ஆனால் அவன் அசையக்கூட இல்லை, அவன் முன்னால் சேலையில்லாமல் வெகுநேரம் நிற்கமுடியாமல் வேகமாக சென்று புடவையையாவது எடுக்கலாம் என்று முயற்சித்தவளை தப்பி ஓட நினைக்கிறாள் என்று தவறாக நினைத்து அவளை அப்படியே தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான்.
கட்டுப்பாடின்றி அவளின் கழுத்து வளைவில் தன் இதழ்களை பதிக்க தொடங்கினான். திமிறியவளின் கன்னத்தை இறுக்கமாக பற்றி அவளின் இதழ்களை வன்மையாக கொய்தான். அதிர்ச்சியுடன் கண்களை அகலவிரித்தவளின் இமைகளின் மேல் முத்தமிட்டு அவளை அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலில் போட்டு அவள் மேல் படர்ந்தான்.
படுக்கையில் அவள் துள்ளினாள், அவளை தன் கைகளாலும் இதழ்களாலும் அடக்கினான். மூளை அவனிடம் அடங்காதே என்று எச்சரிக்கை செய்தது. அவளின் இளமையோ அவன் கைகளும் உதடுகளும் செய்த மாயத்தில் அவளையும் அறியாமல் அவனின் கைப்பாவையாக மாறச் செய்திருந்தது.
முதலில் அவளை பயமுறுத்தி பார்க்க நினைத்து தொடங்கியவன், அவளின் மேனி அவன் கைகளில் குழைவதை கண்டு மோகம் தலைக்கேற படுவேகமாக முன்னேறினான். அவனின் அதிரடி செய்கைகளில் எதிர்ப்பை காட்டவும் மறந்து போனாள். வெற்றி களிப்போடு அவன் அவளை மொத்தமாக ஆள தொடங்கிவிட்டான்.