இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 25-04-2024

Total Views: 17374

பாவை - 17

அஞ்சனாவை அனைவரும் வியந்துப் போய் காண, புதிதான தோற்றத்தோடு காட்சிக் கொடுத்தாள்.

அவள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டு தான் வந்திருக்கிறாள் என்பதை அவர்கள் யாரும் அறியவில்லை. மிகப்பெரிய இக்கட்டு ஹெச்.ஆர் க்கு இருக்கிறது என்பதை அவருமே எதிர்பார்க்கவில்லை.

“ஏன் சார் அமைதியா இருக்கீங்க சொல்லுங்க ? உங்களுக்கு இவரை வேலையை விட்டு தூக்கணும் நினைச்சா வேற எந்த காரணம் சொல்லியாவது தூக்கிருக்க வேண்டியது தானே ? என்ன ஏன் சார் இதுல இழுக்குறீங்க ?” அப்பாவியாக சட்டென முகத்தை மாற்றிக் கொண்டு கேட்க,

“உன்னை இவன் தப்பான எண்ணத்துல தொட முயற்சி பண்ணிருக்கான். அதுனால தான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு ?”

“அப்படி எந்த எண்ணமும் இவர் கிட்ட இல்லை. அப்படியே அவர் என்னை தொட்டாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறோம். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இது எங்களுக்குள்ள இருக்குற பெர்சனல். இதை எதுக்கு நீங்க வெளியே கொண்டு வந்தீங்க ? என் கிட்ட நீங்க கேட்டும் போது நான் பார்த்துக்குறேன்னு தானே சொன்னேன். ரேஷ்மி நீ கூட தானே இருந்தேல ?” என்று அங்கே இருந்தவளிடம் கேட்க அவளுக்கோ வேறு வழியில்லை என்பதால் தலையை தான் அசைத்தாள்.

அந்த நொடி பிரேக்கிங் நியூஸ் ஒன்று அனைத்து செய்தி ஊடங்களில் பரவிக் கொண்டிருக்க, அதனை இங்கிருக்கிறவர்கள் அறியவில்லை.

“காதலிக்கிற நாங்க தனிமையில இருக்கும் போது நீங்க எப்படி எங்களை போட்டோ எடுக்கலாம் ? அதை வச்சி இப்படி எங்களை அவமானப்படுத்துற மாதிரி எதுக்கு சார் மெயில் அனுப்புனீங்க ?” விழிகள் கலங்கக் கேட்கவே,

“அப்போ நீ முன்னவே சொல்லியிருக்கலாம்மா “

“எங்களுக்குள்ள இருக்குற காதலை எப்படி சார் எல்லாருக்கும் வெளிச்சம் போட்டு சொல்ல முடியும். இவர் பண்ணினது தப்பு அப்படின்னா நான் பண்ணினதும் தப்பு சார். எங்க ரெண்டு பேரையும் சேர்த்தே நீங்க வேலையை விட்டு தூக்குங்க சார் “ என்க, அந்த நொடி ஏதோ சத்தம் கேட்டு கைபேசியைக் கண்டான் கேசவன்.

“அப்போ நீ மயக்கத்துல இருந்தது “

“மனம் விட்டு பேச தனியா ஒரு இடம் வேணும்ன்னு போனோம். ஆனா அங்கே எனக்கு ஒத்துக்காத பூவோட வாசனை என்னை மயங்க வச்சிருச்சி. அதை தான் அந்த டாக்டர் மயக்க மருந்துன்னு சொல்லிட்டுப் போனாங்க. இதுக்கு மேல நான் என்ன சொல்லணும் சொல்லுங்க சார் “ என்க, அதே நேரம் கேசவன் அந்த வீடியோவை நண்பனிடம் காட்டினான்.

அதில் வந்த எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்க, “பேச போனீங்க சரி எதுக்கு பின்புறம் போனீங்க ? உன்னோட ஜர்க்கினை கழட்டி. உன் டீஷர்ட் “ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவரின் சட்டையைப் பிடித்தான்.

“போதும் நிறுத்துங்க. அதான் சொல்லிட்டாலே இதுக்கு மேல ஏதாவது கேட்டீங்க அப்பறம் நீங்களும், இந்த ரேஷ்மியும் ஹோட்டல்ல கூத்தடிச்சதை சொல்ல வேண்டியது இருக்கும். நாங்க பண்ணினது தப்பு தான். அப்போ நீங்க பண்ணினது சரியா ? கல்யாணம் முடிஞ்சி குழந்தை இருக்கிற நீங்க எப்படி இப்படி பண்ணலாம். அப்போ உங்களை வேலையை விட்டு தூக்கலாம்மா “ என்று சண்டையிடவே, அங்கிருந்தவர்களுக்கு அனைத்தும் புதிதாக இருக்க சுவாரசியமாகக் கேட்டனர்.

“தேவையில்லாம பேசாதே ? எங்களுக்குள்ள அப்படி எந்த எண்ணமுமில்லை “ என்க,

“அப்படியா அப்போ இதுக்கு என்ன அர்த்தம் ?” என்றவனோ சற்று முன் பிரேக்கிங் நியூஸாக தொலைக்காட்சியில் ஓடுவதைக் காட்டினான்.

“எல்லாரும் உங்க மொபைல்ல பிரேக்கிங் நியூஸ் பாருங்க. நீங்களும் பாருங்க சார் “ என்கவே, வேகமாய் அனைவரும் கண்டனர்.

சென்னை கமிஷனரின் அதிரடிப்படை குழு, அவுட்டர் ரிங் ரோடு பாதையில் உள்ள ஹோட்டலில் விபச்சார விடுதி நடத்தி வருவதாக முக்கிய தகவல் கிடைக்க சோதனை நடத்தினர். அதில் அங்கே தங்கியிருந்த சில பெண்களை மீட்டும், அங்கே வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்தனர்.

 அதில் திடுக்கிடும் தகவலாக அரசியல்வாதி மதிவாணனின் மகன் குமரன் தான் இதற்கு முழு பொறுப்பாக இருப்பதாகவும், அவருமே வேலைப் பார்க்கும் இடங்களில் இருந்து சில பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளன. சிசிடிவி காட்சியில் பரிசோதித்துப் பார்க்கும் போது நேற்று இரவு அவர் கடைசியாக வந்தது தெரிய வந்தது.

இதுவே பிரேக்கிங் நியூசாக ஓடிக் கொண்டிருந்தது. இறுதியாக வந்த பெண் என்று ரேஷ்மியின் முகத்தை மறைத்து காட்டப்படிருந்தது.

“ச்சே ! “ எரிச்சலோடு ஹெச்.ஆர் கத்தவே, அதே நேரம் அங்கிருந்தப் பெண்களும் குசுகுசுவென்று பேசினர்.

அவர்களுக்கு தெரியாதா என்ன இவரின் குணம் என்னவென்று ? ஆண்களுக்கு தெரியாமால் இருந்தாலும் பெண்களுக்கு தெரியாமலா இருக்கும் ? தங்களின் பாஸ் என்பதாலே பெரிதாக கண்டுக் கொள்ளாதது தள்ளியே இருக்க இன்று வலையில் விழுந்து சிக்கிக் கொண்டார்.

“நேத்து நீ இந்த ட்ரெஸ் தானே போட்டிருந்தே ரேஷ்மி. அப்போ இந்த வீடியோல வர்றது நீ தானா ?” சந்தேகம் போல் அஞ்சனா கேட்க, அங்கிருந்துச் சென்று விட்டாள்.

“சார், போலீஸ் வராங்க “ என்று காவலாளி கூற, அதே நேரம் உள்ளே வேகமாய் வந்த நந்தனின் அண்ணன் அவர்களின் முன்னே வந்து நின்றான்.

அஞ்சனாவிற்கு எரிச்சலோ முட்டிக் கொண்டு வந்தது. நிச்சியம் இவன் வந்தால் இவனுக்கு தண்டனை கிடைக்காதே ? இருவரும் கூட்டுக்களவானிகள் தானே ? வேறு காவல் அதிகாரிகளா இல்லை. தன் கரங்களாலேக் கொன்று விட துடித்தாள்.

“என்ன நிதின் இவ்வளோ தூரம் வந்திருக்கே ? அதுவும் கான்ஸ்டபிள் எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கே ?” எதுவுமே தெரியாததுப் போல் ஹெச்.ஆர் கேட்க,

“குமரன், நீ நியூஸ் எதுவும் பார்க்கலையா ? உன்னை கைது பண்ணி சொல்லி எங்களுக்கு மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு. நான் என் கடமையை செய்யணும் ?” என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அவனோ நல்லவன் போல் காட்சிக் கொடுத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இப்போது அனைவரும் என்ன செய்வதென இருக்க, அங்கிருந்த கைபேசி ஓசை எழுப்பியது. அதனை ஒருவன் சென்று எடுக்க, பெங்களூரில் இருந்த அவர்களின் தலைமை அலுவலகத்தில் இருந்து தான் வந்தது.

அனைவரும் அவரவர் வேலையை சரியாக செய்யச் சொல்லி நாளை புதிதாக ஹெச்.ஆர் வருவதாக கூறி வைத்து விட்டனர்.

“என்னாச்சு ?” 

“நாளைக்கு புது ஹெச்.ஆர் வராங்களாம். இப்போ எல்லாரும் வேலையைப் பார்க்கவாம்.” 

“அப்போ இந்த ஹெச்.ஆர் “

 “இதுக்கு மேல அவரை வேலையில வச்சிருப்பாங்களா என்ன ?புதுசா தான் ஆள் வரப் போறாங்களே ? போங்க போய் வேலையை பாருங்க “ என்றதும், அவர்களின் வேலையை பார்க்கச் சென்று விட்டனர்.

ரேஷ்மி அலுவலகத்தை விட்டேச் சென்று விட அஞ்சனாவும், நந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்தனர்.

“லஞ்ச் டைம் கொஞ்சம் பேசணும் உங்க கிட்ட. கேண்டீன் வந்திருங்க “ என்றவளும் அவளின் வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.

மதியம் நேரம் இருவரும் கேண்டீனில் அமர்ந்திருக்க என்ன பேசுவதென்றே தெரியவில்லை. காதல் என்ற பொய்யை கூறி விட்டேன் சரி. அதனை இவன் எவ்வாறு எடுத்துக் கொண்டானோ ? எப்படி ஆரம்பிப்பது ? என்ற யோசனையில் அஞ்சனா அமர்ந்திருந்தாள்.

 “ஐ லவ் யூ அஞ்சனா “ பட்டென நந்தன் கூற,

திகைத்து அவனைக் கண்டவள், “இல்லை, அது நான் உங்களை காப்பாத்த சும்மா பொய் சொன்னேன் “ என்று திணறினாள்.

“நீ வேணா பொய் சொல்லிருக்கலாம். ஆனா நான் இப்போ பொய் சொல்லலை. நான் உன்னை காதலிக்கிறேன். நீ பத்திரமா இருக்கணும் நினைச்ச நான் உன் பின்னாடி வரும் போது எனக்கு புரியல. வேற ஒருத்தன் உன் கிட்ட ஒருமையில பேசுனாலே எனக்கு அப்படியே மண்டை சூடேடுறனது. அப்போ ஏன்னு தெரியல ? அந்த ஹெச். ஆரோட பார்வை டூர் போயிருந்தப்பா உன் மேல தப்பா படிஞ்சது. அப்படியே அவனை கொன்னு போடலாம் போல இருந்தது. நீ என்னை தப்பா நினைக்க கூடாதுன்னு தவியா தவிச்சேன். உனக்கு நான் எப்பவும் உண்மையானவனா இருக்கணும் நினைச்சேன். இதுக்கெல்லாம் அர்த்தம் ஏன்னு நான் என்னைய கேள்வி கேட்கும் போது தான் தெரிஞ்சது காதல்ன்னு “ என்று தன் மனதில் இருந்ததை கூறி விட்டான்.

அவன் கூறுவதைக் கேட்ட அஞ்சனாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளுக்கு இப்போது காதலிக்க நேரமில்லை. அவளின் கொள்கையே வேறு ? அதனை இவனிடம் கூறினால் புரிந்துக் கொள்வானா என்ன ? ஏன் கூற வேண்டும்.

“உனக்கு நிச்சியம் என் மேல காதல் வரும். அப்போ உன் முடிவை சொன்னா போதும். அதுவரைக்கும் நான் காத்துக்கிட்டு இருக்கேன் “ என்றவனோ, அப்போதே தொந்தரவு கொடுக்காது நல்லவனாக எழுந்துச் செல்ல. நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.

மாலை நேரம் போல் வேலை முடிந்து அனைவரும் கிளம்ப நந்தனிடமும் சரி, அஞ்சனாவிடமும் சரி ஒரே போல் தான் கேட்டனர்.

“ரெண்டு பேரும் காதலிக்கிறீங்கன்னு சொல்லவேயில்லை. “ என்று தெரிந்தவர்கள் கேட்க, ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்து விட்டுச் சென்றனர்.

‘இது அனைவரின் முன்பும் தான் கூறியது பொய் தானே ? அதனை எப்படி பொய் என்று சொல்ல முடியும் ?’  

ஹாஸ்டல் நோக்கி அவளின் இஸ்கூட்டிச் செல்ல, அவளின் பின்னே அவளுக்கு தெரிவதுப் போல் தான் வந்தான். தினமும் சற்று தள்ளி வருபவன் இன்று உடன் வருபதுப் போல் வந்தான்.

ஹாஸ்டலுக்கு நுழைய வாட்ச்மென் கதவினை திறந்து விடும் போது தான் அவனைக் கவனித்தார். அஞ்சனாவும் அவனை திரும்பிப் பார்க்க, நந்தனோச் சென்று விட்டான்.

“யாரும்மா அந்த தம்பி. தினமும் உன் பின்னாடியே வருது. எதுவும் பிரச்சனை கொடுக்குதாம்மா ?” கேட்க, அவரின் கூற்று கூட அவளை யோசிக்க வைத்தது.

“இல்லை. அவர் என் கூட ஆபிஸ்ல ஒன்னா வேலை பார்க்குறவர் தான் “ எனக் கூறி உள்ளேச் சென்றவள் தன் அறைக்குச் சென்று விட்டாள்.

படுக்கையில் வந்து அமர்ந்தவளின் மனதிலோ பெரும் யோசனை. நந்தனின் முடிவை ஏற்கவும் முடியாது நிகாரிக்கவும் முடியாது தடுமாறினாள்.

அந்த நொடி சரியாக வசந்திடமிருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ “

“என்னாச்சு அஞ்சனா ? ஆபிஸ்ல எல்லாம் ஓகே தானே ?” என்க, இன்று நடந்த அனைத்தையும் கூறினாள். மதியம் தாங்கள் இருவரும் பேசியதை மட்டுமே தவிர்த்து விட்டாள்.

“என்னது அந்த நிதின் தான் வந்து கைது பண்ணுனான்னா ?”

“ஆமா “

 “ச்சே ! அப்போ நாம்ம பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போச்சு போ. எந்த பிரோஜனமுமில்லை “ எரிச்சலோடு வசந்த் கூற,

“ரேஷ்மி என் கிட்ட சொன்ன அந்த வீடியோ இருக்குல்ல அதை கமிஷினருக்கு அனுப்பிரலமா ? அது வொர்க் அவுட் ஆகும்ல “

“கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம் அஞ்சனா, இப்போ நம்ம கஷ்டப்பட்டதுக்கு என்ன முடிவு வரும்ன்னு. எல்லாமே சேர்ந்து மொத்தமா உறுதிபடுத்தலாம்ன்னு பார்த்தா நீ என்னடானா இப்பவே இதை பண்ண சொல்லிட்டே ?”

“ஆபிஸ்ல அந்த ஹெச்.ஆர் இருக்குற வரைக்கும் என்னால ஒன்னும் பண்ண முடியாது. அதுனால தான் அவரோட வேலையை பார்க்க இப்படி பண்ணுனேன். அதுவுமில்லாம காரணமே இல்லாம நந்தன் மேல தப்பான பலி போட்டது பிடிக்கலை “

“இப்போ அந்த நந்தன் என்னாச்சு ?”

“அதான் சொன்னேன்னே ஆபிஸ்ல வச்சி நடந்ததை”

 “சரி எதுக்கு கொஞ்சம் கவனமா இரு. இன்னைக்கு அந்த ஹெச். ஆர் கைது பண்ணிட்டு போனதுக்கு காரணம் நம்ம தான்னு தெரிஞ்சது அவ்வளோ தான் நம்மளோட உயிருக்கே ஆபத்து வரும். ஏன்னா அவன் அப்பன் ஒரு அரசியல்வாதி “

“சரி. கமிசினர் நல்லவர் தானே ? அவருக்கே தெரியாத போது அவரை மீறி எப்படி வெளியே போகும். நமக்கு நல்லதே நடக்கும்ன்னு நினைச்சிக்கோங்க. துணையா எனக்கு அக்கா இருக்கா ?” என்றவளின் குரலோ கலங்கி விட, சொல்லிக் கொண்டு கைபேசியை வைத்தாள்.

நினைவுகள் முழுவதும் இந்த இரு நாட்கள் தானும் வசந்தும் சேர்ந்துச் செய்த செயலை நினைத்தது.

டூர் சென்று வந்ததுமே வசந்த்தை நேரில் கண்டு அங்கு தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஹெச்.ஆர் பற்றி கூறினாள்.

“என்ன சொல்லுற நீ ?”

“ஆமா, அந்த நேரம் நந்தன் வரப் போய் தான் எனக்கு ஒன்னுமாகலை. ஆனா நான் போனதுல எனக்கு ஒரு தகவல் கிடைச்சிருக்கு “ என்க,

“என்ன தகவல் ?”

“ரேஷ்மி ஒரு நாள் சரியான போதையில இருந்தா. அப்போ அவ என்ன பேசுறான்னு அவளுக்கே தெரியல. நான் பேச்சு கொடுத்து வீடியோ எடுத்தேன் “ என்று அந்த வீடியோவைக் காட்டினாள்.

அதில் தங்கியிருந்த அறையில், “நீ நம்ம ஹெச்.ஆர் பத்தி என்னை நினைக்கிற ரேஷ்மி ?” என்க,

“ஏன் அவரை பத்தி கேட்க்குற ? உனக்கு அவரை பிடிச்சிருக்கா ?”

“வசதி வாய்ப்பு செல்வாக்கான ஆளு. யாருக்கு தான் பிடிக்காது “ என்று அவளோடு சேர்ந்துக் கொள்வதுப் போன்று பேச,

“உனக்கு ஒரு விசியம் தெரியுமா ? ஹெச்.ஆர் என்னைய எப்படி பிடிக்குமோ அதே மாதிரி உன்னையும் பிடிக்கும். சொல்லப் போனா இந்த டூர் அரேஞ்ச் பண்ணுனதே உன்னை அவர் அடைய தான். நீ மட்டும் அவர் கிட்ட போனே நினைச்சிக்கோ உன் வாழ்க்கையே மாறிடும் “

“அப்படியா ? உண்மையாவா ?“ அதிசயமாக வாயை பிளந்துக் கொண்டுக் கேட்க,

“இப்போ கூட அவர் என் கிட்ட என்ன சொன்னாருன்னா. உன்னை அவர் அனுபவிக்கணும்மாம். அதுக்காக எனக்கு பத்து லட்சம் தரேன்னு சொன்னாரு. உனக்கு சம்மதம்ன்னா சொல்லு இப்பவே அவரை வரச் சொல்லுறேன் “

“இப்போ வேண்டாம் “

“ஏன் ? பார்க்க தான் ஆள் அப்படி இருக்காரு. ஆனா ரொம்ப சாப்ட். அப்படியே உருக வைக்கிறாரு “ என்று போதையில் அவர்களுக்குள் நடந்த உறவினைப் பற்றி கூறவே, முகத்தை சுழித்துக் கொண்டுக் கேட்டாள்.

“நான் கூட கேள்விப்பட்டேன் பொண்ணுங்க விசியத்துல வீக்ன்னு உண்மை தான் போல ?”

“ஆமா, நம்ம ஆபிஸ்ல எத்தனை பொண்ணுங்களை கரெக்ட் பண்ணிருக்காருன்னு தெரியுமா ?”

“என்ன சொல்லுற நீ ?”

“ஆமா. எனக்கு முன்னாடி சாரா. அவளுக்கு முன்னாடி ஆனந்தி. ஆனா என்னை அவருக்கு அந்த ஆனந்தியை கரெக்ட் பண்ணுறது தான் கஷ்டமா போச்சு. பல நாள் பிளான் போட்டு தன் கைக்குள்ள கொண்டு வந்தா ஒரு நாள் தான் அவரால அனுபவிக்க முடிஞ்சது. மறுநாள் அவ செத்து போயிட்டா. மூளை இல்லாதவ ஏரில விழுந்துட்டா. அவரோட மட்டும் அவ தினமும் இருந்திருந்தா இந்த நேரம் அவ லட்சாதிபதி “ என்று கூறிக் கொண்டே போக, கேட்ட அஞ்சனாவால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அனைத்தையும் பதிவு செய்தவள் வசந்திடம் காட்ட, தன்னவள் இறுதியாக எப்படி துடித்தாலோ நினைத்தவனோ அப்படியே மடிந்து கரந்தான்.

 தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Leave a comment


Comments


Related Post