இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே - 12 அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 21-05-2024

Total Views: 10834

இதயம் - 12

"ஏன் வாழ்றன்னே தெரியல டா" என்று வாசு வாழ்வே வெறுத்தவன் போல் விரக்தியாக கூற பரத் "ஏன்தான் இப்படி எல்லாம் பேசற ... நாங்க எல்லாம் உனக்காக இல்லையா ... என்னவோ வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்தவன் மாதிரி பேசற" என்று தன் அண்ணன் தங்களை பற்றி சிந்திக்காமலே பேசுகிறானே என்ற கோபத்தில் கேட்டான். "உங்களை எல்லாம் நினைச்சதால தான் டா இப்படி தோனுது ... இப்போ நா யாரும் இல்லாதவனா இருந்தா ... அவ வந்தா என்ன போனா என்னன்னு நினைச்சத செஞ்சிருப்பன் ... ஆனா இப்போ நீ ப்ரீத்தி அம்மா அப்பா எல்லாரையும் யோசிச்சி அவ விட்டுட்டா கோவத்துல அவ உங்களை எல்லாம் எதாவது கஷ்டப்படுத்திடுவாளோன்னு தயக்கமா இருக்கு" என்று வாசு தன் யூகத்தை பற்றிக் கூறினான். 

"முதல்ல ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ ... நாங்க முதல்ல உன்னோட மன நிம்மதியையும் உன்னோட விருப்பத்தையும் தான் முதல்ல பாப்போம் அப்பறம் தான் எங்களோட பேர் எல்லாம்" என்று பரத் கூற வாசு "இத்தனை வருஷமா என்னை நம்பி வெயிட் பன்றாளேன்னு நினைக்கும் போது பாவமா இருக்கு" என்று கூற பரத் "நீ இப்படியே குழப்பத்துலே இரு" என்று கூறினான். "சரி இப்போ நீ என்ன பன்னலான்னு இருக்க" என்று பரத் கேட்க "அவங்க எப்படியும் என்னை கையெழுத்து போட கூட்டிட்டு போவாங்க இல்லை நா போட்டா தான ரெஜிஸ்ட்ரேஷன் முடியும் ... அதை நா பாத்துக்றன்" என்று வாசு கூறினான். "இப்படின்னு தெரிஞ்சிருந்தா ... நா ஊர்லே இருந்திருப்பன்" என்று பரத் கூற "ம்ச் விட்றா விட்றா ... நம்ம செலவுல வந்திருந்தா பீல் பன்னலாம் ... நம்ம இரண்டு நாள் என்ஜாய் பன்னிட்டு போலாம்" என்று வாசு கூறினான். 

"ஆமா நீயும் ஔன் முதலாளியும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டிங்களோ" என்று வாசு கேட்க "அவ்வளோ க்ளோஸ் இல்லை ... இப்ப தான் உன்னோட சிக்த் ஸ்டான்டர்ட் வரை சொல்லி இருக்கன் ... இனி தான் உன் அடல்ட் வரைக்கும் சொல்லனும்" என்று பரத் கூறியதும் வாசு அதிர்ந்து "நீங்க ப்ரண்ட் ஆனதுக்கு என் பாஸ்ட்ட எதுக்கு டா அவ கிட்ட சொல்லிகிட்டு இருக்க" என்று கேட்டான். "அவங்க அவினாஷ் சாரோட சைல்ட்ஹுட் சொன்னாங்க சோ நா உன்னோடத சொன்னன்" என்று பரத் கூற வாசு அவனை முறைத்தான். இருவரும் வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். சரியாக இரவு அஞ்சனா வந்து வாசுவை பப் செல்வோம் வா என்றழைக்க பரத் "ஓகேடா நாளைக்கு பாக்கலாம் நா தூங்க போறன்" என்று வாசுவிடம் சாதாரணமாக கூறி தூங்கச் செல்கிறேன் என்பதை மட்டும் அழுத்தி கூறி அவனை வெறுப்பேற்றி விட்டுச் சென்றான். வாசு போகும் தன் தம்பியை முறைத்தவாறே நின்றிருந்தான். "உன் தம்பி எதுக்காக இங்க வந்துருக்கன்னு சொன்னானா" என்று அஞ்சனா அண்ணனும் தம்பியும் ஏதாவது ப்ளான் வைத்திருப்பார்களோ என்ற எண்ணத்தில் கேட்டாள். "சொன்னான் ... அவங்க வாங்க வந்த நிலத்தை எவனோ ஒரு பரதேசி ஏமாத்தி அதிக விலை கொடுத்து வாங்க முன் வந்து பிரச்சனை பன்றானாம் அதுக்காக தான் வந்திருக்காங்களாம் ... அந்த ஆளுக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்காதா அஞ்சு ... அடுத்தவங்க அட்வான்ஸ் கொடுத்த நிலத்தை எப்படி இவனால வாங்க முடியுது" என்று வேண்டுமென்றே வாசு அஞ்சனாவின் தந்தையை திட்டினான். 

அஞ்சனா தன் தந்தையை திட்டும் வாசுவை முறைத்தவாறே "நிலத்தை யார் வாங்கனா என்ன ... அதிகமா யார் கொடுக்கறாங்களோ அவங்களுக்கு நிலம் கிடைக்க போது இதுல அவரை எதுக்காக நீ தேவையில்லாம திட்ற" என்று மூக்கின் மேல் கோபத்தை நிறுத்தி கேட்டாள் அஞ்சனா. "உனக்கு புரியல அஞ்சு ... இது நம்ம ஊர் இல்லை இந்த இடம் இல்லன்னா இன்னொரு இடம்ன்னு போக ... பரத் சொல்லி இருக்கான் ... இந்த நிலம் கண்டுபிடிக்கவே அவங்களுக்கு ஆறு மாசம் ஆகி இருக்கு ... அதுக்கு அப்பறம் அந்த ஓனர்கிட்ட பேசி விலைக்கு வாங்க அவங்களுக்கு ஒன் இயர் அகி இருக்கு ... எல்லா ப்ராசஸ்ஸும் முடிஞ்ச அப்பறம் நடுவுல ஒருத்தர் வந்து நுழைஞ்சா அவங்க உழைப்பை திருட்ற மாதிரி இருக்காதா" என்று வாசு கூற அஞ்சனா "ம்ச் அவங்க பிரச்சனை நமக்கு எதுக்கு வா நமக்கு டைம் இல்லை கிளம்பலாம் ... ரெடி ஆகி வா" என்று கூறினாள். வாசுவும் சிறிது சலிப்புடனே எழுந்துச் சென்று தயார் ஆகி வர இருவரும் நைட் க்ளப் என்றழைக்கும் மதுபான விடுதிக்குச் சென்று சேர்ந்தனர். உள்ளே நுழைந்ததும் வாசு சென்று அமைதியாக அமர்ந்து விட அஞ்சனா "வந்ததும் எதுக்கு உட்கார்ர வா ஒரு டான்ஸ் போட்டு வரலாம்" என்று கூறினாள். வாசு "எனக்கு பழக்கம் இல்லை அஞ்சு நீ என்ஜாய் பன்னு" என்று கூறினான். "பரவால்ல பழகிக்கோ" என்று கூறியவள் வாசுவை இழுத்துச் சென்று கட்டாயமாக அவனை கை கால்களை அவளே தூக்கி ஆட்டி ஆட வைத்தாள். வாசுவும் விதியே என்று அவள் இழுப்பிற்குச் சென்றான். 

மயில்சாமி தன் அறையில் அமர்ந்து எப்படியாவது அவினாஷ்ஷையும் யாழிசையையும் தன் காலடியில் விழ வைக்க வேண்டும் என்று நினைத்து ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தார். அவரின் அதிகைப்பட்ச ஆசையே அவினாஷ்ஷும் யாழிசையும் அவமானப்பட்டு தன் காலடியில் விழ வேண்டும் என்பது தான். அதற்கு காரணம் அவினாஷ்ஷின் தந்தை. அவரின் தொழில்முறை எதிரியான மயில்சாமி தற்பொழுது தன் தந்தையை விட பல மடங்கு புத்திசாலிகளான அவினாஷ் மற்றும் யாழிசையை தோற்கடிக்க திட்டம் தீட்டி இறுதியில் தற்பொழுது வரை மண்ணை தான் கவ்விக் கொண்டிருக்கிறார். இம்முறை என்ன ஆகினும் விட்டுவிடவேக் கூடாது என்பதாய் கொடூரமாய் ஒரு திட்டத்தை தீட்டினார். ஹோட்டல் ஊழியர் ஒருவரை கைக்குள் போட்டுக் கொண்டு பரத்திற்கு மயக்க மருந்து கொடுத்து அவனையும் யாழிசையையும் ஒரே அறைக்குள் தங்க வைத்து யாழிசையின் மானத்தை ஊரார் முன் கெடுக்க வேண்டும் என்பது தான் அவரின் திட்டம். 

அதன்படி அஞ்சனாவும் வாசுவும் கிளம்பிய உடனே மயில்சாமி தன்னுடைய ஆளை அனுப்பி வைத்தார். அவனும் பரத்தின் உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தான். பரத்தும் உணவில் இருப்பது உறக்க மருந்து என்று அறியாமல் மொத்த உணவையும் உண்டு முடித்தான். திடீரென மயில்சாமிக்கு அவினாஷ்ஷின் நினைவு வந்தது. ஒருவேளை அவினாஷ் இதை தடுக்க வந்தால் என்று யோசித்தவர். உடனடியாக அவினாஷ்ஷை அங்கிருந்து அனுப்ப நில முதலாளிக்கு அழைத்து அவினாஷ்ஷை பார்க்க வேண்டும் என்று அவசரமாக வரக் கூற கூறினார். அவரும் அதே போல் செய்ய அவினாஷ் யோசிக்காமல் கிளம்பினான். யாழிசையை இரவு நேரத்தில் அலைய வைக்க வேண்டாம் என்றும் போகும் இடத்தில் ஏதேனும் ஆபத்து என்றால் யாழிசை தங்களின் வம்சத்தில் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் தனியாக கிளம்பிச் சென்றான். அத்தோடு பரத்தை அவளுடன் விட்டுச் செல்லும் தைரியம் அவனிற்கு. 

அவினாஷ் கிளம்பியதை உறுதி செய்துக் கொண்ட பின் மயில்சாமி பரத்தின் அறைக்கு யாழிசையை வர வைக்க பரத்தின் கைப்பேசியை எடுத்து யாழிசைக்கு குறுஞ்செய்தி அனுப்பக் கூறினான். அவனும் பரத்தின் கைப்பேசியை கடவுச்சொல் போட்டு திறக்க முயன்று முடியாமல் போனதால் மயில்சாமி தன் திட்டம் கெட்டு விடுமோ என்று பதட்டத்தில் அங்கும் இங்கும் அலைந்தார். பின் ஒரு முடிவாக அவனை யாழிசை அறை கதவை தட்டி பக்கத்து அறையில் இருப்பவர் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக கூறி அழைத்துச் சென்று அறையில் விட்டு பூட்டி விடுமாறு கூற அவனும் சரி என்று யாழிசை அறையை தட்டச் சென்றான். ஆனால் அவனுக்கு முன்பே ஒருவன் போதை தலைக்கேற தள்ளாடிய நடையுடன் பொத்தென யாழிசையின் அறை கதவின் மேல் விழுந்து கீழே விழுந்தான். மயில்சாமியின் ஆளோ அதிர்ந்து யார் அவன் என்று தூக்க போக அதற்குள் கதவை தட்டும் சத்தம் கேட்டு யாழிசை கதவை திறந்தாள். 

யாழிசை கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் அவன் பரத்தின் அறைக்குள் சென்று மறைந்துக் கொண்டான். யாழிசை யாரோ என்று கதவை திறந்தவளின் காலடியில் விழுந்தது வாசு என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியின் உச்சத்தில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து வாசுவின் தலையை திருப்பி அவன் முகத்தை கையில் ஏந்தியவள் கன்னம் தட்டி "வாசு" என்றழைத்தாள். போதை மயக்கத்தில் வாசு "த...பூ ... அசு" என்று உலறினான். யாழிசை அவனின் வார்த்தைகள் புரியாமல் "என்ன ... என்ன வாசு சொல்ரிங்க எனக்கு ஒன்னும் புரியல" என்று யாழிசை கேட்க வாசு மெதுவாக எழ முயற்சித்தான். யாழிசை அவன் எழத் தான் நினைக்கிறான் என்று வாசு எழ உதவிக்கரம் நீட்ட அவனோ அதை தட்டி விட்டு "நோ" என்று முறுக்கிக் கொண்டு தள்ளாடியவாறே நகர்ந்து நின்றான். பரத் அறைக்குள் நின்றிருந்தவனோ எப்படியும் மயில்சாமி அப்பெண்ணை ஒரு ஆடவனுடன் சேர்த்து வைத்து தானே அசிங்கப்படுத்த கூறினான் அதற்கு இவனே இருக்கட்டும் என்று யாழிசையின் அறை கதவை பூட்டி விட்டு சென்று விட்டான். மயில்சாமி கேட்டதற்கு ப்ளான் சக்சஸ் என்று வேறு கூறினான். ஆனால் காலை தான் மயில்சாமிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தெரியாமல் தன் திட்டம் நிறைவேறப்போகும் களிப்பில் மதுபானங்களாக வாங்கி பருகி கட்டிலில் சாய்ந்தார். 

நைட் க்ளப்பில் ஆடிக் கொண்டிருந்த வாசுவை அஞ்சனா குடிக்க மாட்டேன் என்று கூறியதையும் பொருட்படுத்தாது கட்டாயப்படுத்தி கோபமாகி திட்டி அவனை குடிக்க வைத்தாள். இன்று இரவு போதை மயக்கத்தில் இருவரும் ஒன்றிணைந்து விட்டால் பிறகு வாசுவே நினைத்தாலும் அவனிற்கு விருப்பமே இல்லையேனும் தன்னை விட்டு செல்ல மாட்டான் என்று நினைத்தாள். அத்தோடு அவனின் வளர்ப்பும் அப்படிபட்டது தான். இதுநாள் வரை அவள் வாசுவை எத்தனையோ முறை அவமானப்படுத்தியும் விட்டுச் செல்லாமல் இருக்கிறான் என்றால் அவனின் மனம் ஒருத்திக்கு தான் என்பதில் உறுதியாக இருக்கிறது என்பது தானே அர்த்தம் என்று நினைத்த அஞ்சனா வாசு முழுதாய் போதைக்குள் மூழ்கும் அளவிற்கு மதுவை கொடுத்தாள். வாசு தன் சுயநினைவை இழந்து கண்களில் மயக்க போர்வை போர்த்த எதிரில் இருப்பவர்கள் கூட மங்கலாக தெரியவும் தலையை சிலுப்பினான். அவன் தலையை சிலுப்ப நகர தலைக்கு பதில் அவனது கால்கள் தான் அங்கும் இங்கும் தள்ளாடியது. கண்களை கசக்கியும் பார்த்தான். ஆனால் முன்னால் எதுவுமே தெளிவில்லாமல் இருந்தது. அத்தோடு அவனின் கண்கள் போதையில் சுருங்கி போய் விரிக்க முடியாமல் சிரமமாக இருந்தது. அஞ்சனா வாசு போதைக்குள் மூழ்கி போனதை உணர்ந்து அவளும் கழுத்து வரை குடித்து விட்டு வாசுவை தனதறைக்கு அழைத்துச் சென்றாள். வாசு கட்டிலில் விட்டத்தை பார்த்தவாறு பொத்தென விழுக அஞ்சனா தன் ஆடைகளை கலைத்தவாறே வாசுவின் மேல் படர்ந்தான். போதையில் கை கால்களின் அசைவின் வீரியம் குறைந்த போதிலும் அஞ்சனாவின் தோளை பற்றி தள்ளி விட்டான். அஞ்சனா விடாமல் "ஒரே ஒரு முறை தான் வாசு ... லெட்ஸ் என்ஜாய் த நைட் .. எப்படியும் கல்யாணம் பன்னிக்க தான போறோம்" என்று குழைவுடன் கேட்டவாறே அவன் மேல் மீண்டும் விழுந்தாள். வாசு தன் மொத்த சக்தியையும் திரட்டி அவளை தள்ளி விட அவளோ கட்டிலுக்கு கீழே உருண்டு விழுந்தாள். 

வாசு மெதுவாக எழுந்து நின்று "தப்பு அஞ்சு" என்று கூறி விட்டு வேகமாக வெறியேறி விட்டான். அஞ்சனாவும் தள்ளாடியவாறு தான் வெளியில் வர முயற்சித்தாள். ஆனால் அவள் வாசுவை விட அதிகமாக குடித்திருந்ததால் தரையிலே விழுந்து விட்டாள். வாசு தட்டு தடுமாறி பரத் அறைக்குத் தான் செல்ல வேண்டும் என்று வந்தான். ஆனால் யாழிசை அறை கதவை தட்டி அங்கேயே விழுந்தும் விட்டான். யாழிசையின் முகம் தெரியாததால் வாசு அவளை அஞ்சனா என்று நினைத்து அவளை தொட விடாமல் வீராப்பாக எழுந்து நின்றான். யாழிசை அவனின் செயலில் புன்னகைத்தவாறே மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவனின் செயல்களை பார்த்தாள். பின் என்ன தோன்றியதோ அவளின் கைப்பேசி எடுத்து வாசுவின் செயல்களை வீடியோ எடுக்க துவங்கினாள். 

வாசு தள்ளாடியவாறே கதவை திறக்க முயல கதவோ வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது. வாசு இழுத்து இழுத்து பார்த்து கை பிடி வழுக்கி விட பின்னால் நின்றிருந்த யாழிசை மேல் விழுந்தான். யாழிசை வாசுவை பிடித்துக் கொண்டு கைப்பேசியை அறை முழுதும் தெரிவது போல் மேசை மேல் வைத்தாள். வாசு மீண்டும் அஞ்சனா தான் தன்னை ஏதோ செய்ய போகிறாள் என்று நினைத்துக் கொண்டு படக்கென நிமிர்ந்தவன் முன்னால் சாய போக பதறிய யாழிசை அவனை பிடித்து இழுத்து கட்டிலில் அமர வைத்தாள். வாசு இரண்டு நிமிடம் கூட அமர்ந்திருக்க மாட்டான் உடனே வாந்தி எடுக்க யாழிசை தலையில் கை வைத்துக் கொண்டு நின்றாள். வாசு வாந்தி எடுத்து விட்டு "அச்சச்சோ" என்று வாய் மேல் தன் இரு கையையும் வைத்து அதிர்ந்தான். யாழிசை அவனை முறைத்து விட்டு வாசு சட்டை மேல் இருந்த வாந்தியை சுத்தம் செய்ய "சட்டைய கழட்டுங்க வாசு" என்று கூறினாள். "நோ" என்று வாசு தன் மார்பின் குறுக்கே கைகளை வைத்துக் கொண்டு பின்னால் சாய்ந்தான். யாழிசை தலையில் அடித்துக் கொண்டு கழிவறை சென்றவள் அவளே அதை சுத்தம் செய்ய தொடங்கினாள்.


Leave a comment


Comments


Related Post